Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் நிதியுதவி: டெல்லி அரசின் சூப்பரான திட்டம் அறிமுகம்

பெண்களுக்கு மாதம் 2,500 ரூபாய் நிதியுதவி: டெல்லி அரசின் சூப்பரான திட்டம் அறிமுகம்

Samayam Tamil 1 week ago

பெண்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல, மற்ற மாநிலங்களிலும் பெண்களுக்கு நிதியுதவி வழங்கும் சிறப்புத் திட்டங்கள் உள்ளன. அந்த வகையில் டெல்லி அரசு மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்தைத் தொடங்குகிறது. இத்திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்க உள்ளார். இத்திட்டம் ஆகஸ்ட் 28 அன்று தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், இது குறித்து அரசிடமிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளிவரவில்லை.

பெண்களுக்கு எவ்வளவு நிதியுதவி கிடைக்கும்?

இத்திட்டத்தின் கீழ், 21 முதல் 60 வயதுக்குட்பட்ட தகுதியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ. 2,500 நிதியுதவி வழங்க முன்மொழியப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக ஆன்லைன் பதிவு போர்டல் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனாளிகள் விண்ணப்பிக்கலாம். டெல்லியில் சுமார் 20 முதல் 22 லட்சம் பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. பெண் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே இத்திட்டத்திற்குப் பதிவு செய்ய முடியும். விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ போர்டலில் தங்கள் படிவத்தை நிரப்ப வேண்டும்.

சந்தா கட்டணக் குழப்பங்களுக்கு தீர்வு: ஆட்டோமேட்டிக் பேமெண்ட் லேபிள் வசதி அறிமுகம்

தேவையான ஆவணங்கள்!

  • ஆதார் எண்
  • ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு
  • மொபைல் எண்
  • பிறந்த தேதி
  • திருமண நிலை
  • இருப்பிடச் சான்றிதழ்
  • சுயபிரகடனப் படிவம் (Self-declaration form)

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

டெல்லி அரசின் முன்மொழியப்பட்ட தகுதிகளின்படி, விண்ணப்பதாரர்கள் பின்வரும் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்:

  • டெல்லியில் நிரந்தரமாக வசிப்பவராக இருக்க வேண்டும்.
  • 21 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • ஆண்டு குடும்ப வருமானம் ரூ. 2.5 லட்சம் முதல் ரூ. 3 லட்சம் வரை இருக்க வேண்டும்.

உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கும் சூப்பரான திட்டம்: 1000 ரூபாயில் கணக்கைத் தொடங்கலாம்

யாரெல்லாம் பயன்பெற முடியாது?

அரசுப் பணியில் உள்ள பெண்கள், வரி செலுத்துவோர், அரசு ஓய்வூதியம் பெறும் பெண்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் வைத்திருப்பவர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்பட மாட்டார்கள். டெல்லி அரசு 2026 - 27 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் இந்தத் திட்டத்திற்காக ரூ. 5,110 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையிலும் பெண்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கப்படும் என அரசு உறுதியளித்திருந்தது. இத்திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரக்ஷா பந்தன் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சொந்த வீடு இல்லயா? பெண்கள் பெயரில் ஈசியா கடன் கிடைக்கும்: ஏகப்பட்ட சலுகைகள்

இந்த மகிளா சம்ரிதி யோஜனா' திட்டமானது பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையில் உள்ள பெண்களுக்குத் தொடர்ச்சியான நிதியுதவி வழங்குவதன் மூலம் அவர்களை வலுவூட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும் 2,500 ரூபாய் தொகையானது, அப்பெண்கள் தங்கள் குடும்பத் தேவைகள், குழந்தைகளின் கல்வி, சுகாதாரம் மற்றும் பிற அத்தியாவசியச் செலவுகளைச் சமாளிக்க உதவும். பெண்களின் பொருளாதார மேம்பாட்டை நோக்கிய ஒரு முக்கிய முன்னெடுப்பாக இத்திட்டம் அமையும் என்று அரசு கருதுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil