Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
புதுச்சேரியில் திமுக -காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம்..தலைமை யார் ? செல்வப்பெருந்தகை தகவல்

புதுச்சேரியில் திமுக -காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம்..தலைமை யார் ? செல்வப்பெருந்தகை தகவல்

Samayam Tamil 2 months ago

மிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப்பங்கீடு தொடர்பாக சில முரண்கள் இருந்ததாக சொல்லப்பட்டது.

ஆனால் கடைசியில் அந்த முரண் சரி செய்யப்பட்டு சுமுகமான பேச்சுவார்த்தை ஏற்பட்டு தொகுதிப்பங்கீடு உறுதிசெய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து தற்போது புதுச்சேரியிலும் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே குழப்பம் நிலவி வருவதாக தகவல்கள் வருகின்றன. தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை எங்கே நடைபெற வேண்டும் ? என்பதிலேயே அவர்களுக்குள் குழப்பம் ஏற்பட்டு இருப்பதாக தெரிகின்றது.

திமுகவினர் எங்கள் அலுவலகத்தில் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்தலாம் என்கின்றனர். அதே சமயம் காங்கிரஸ் கட்சியினர் எங்கள் அலுவலகத்தில் தான் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்த வேண்டும் என சொல்கின்றனர். இவ்வாறு யாருடைய கட்சி பெரிய கட்சி என்கின்ற ஈகோ பிரச்சனை திமுக மற்றும் காங்கிரஸ் இடையே போய்க்கொண்டு இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

இந்நிலையில் புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான சிவா நேற்று பேசுகையில், திமுக தலைமையில் தான் போட்டி என கூறினார். ஆட்சியில் பங்கு எல்லாம் இல்லை, திமுக தான் தலைமை தாங்கும். கூட்டணி ஆட்சி வேண்டுமானால் அமையலாம் என கூறினார். இதனைத்தொடர்ந்து இன்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் புதுச்சேரியில் திமுக தலைமை தாங்குமா ? அல்லது காங்கிரஸ் தலைமை தாங்குமா ? என கருத்து கேட்கப்பட்டது. அதற்கு செல்வப்பெருந்தகை, புதுச்சேரியை பொறுத்தவரை காங்கிரஸ் தான் தலைமை. தமிழ்நாட்டில் திமுக தலைமை, புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமை என பேசினார் செல்வப்பெருந்தகை. இதனைத்தொடர்ந்து மேலும் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே குழப்பம் அதிகரிக்கும் என்றே தெரிகின்றது.

நேற்று திமுகவை சேர்ந்த சிவா, நாங்கள் தான் தலைமை ,இதில் என்ன சந்தேகம் என்பது போல பேசினார். ஆனால் இன்று காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை புதுச்சேரியை பொறுத்தவரை காங்கிரஸ் தான் தலைமை என கூறியிருக்கின்றார். இதிலே மிகப்பெரிய முரண் இருப்பதால் இறுதி முடிவு என்னவாக இருக்கும் என தெரியவில்லை. திமுகவினர் நாங்கள் தான் தலைமை என்கின்றனர்.

காங்கிரஸ் கட்சியினர் அவர்கள் தான் தலைமை என கூறிக்கொண்டு வருகின்றனர். இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான முடிவு எட்டப்படுமா ? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்திருக்கிறது. மேலும் தொகுதிப்பங்கீட்டை பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் திமுக இடையே சுமுகமான முடிவு எட்டப்படவில்லை. காங்கிரஸ் கட்சி இம்முறை புதுச்சேரியில் 18 தொகுதிகளை கேட்பதாக தகவல் வருகின்றன. அதே சமயம் கூட்டணிக்கு காங்கிரஸ் தான் தலைமை தாங்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டதாக தெரிகின்றது.

இதனால் தான் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இழுபறி நிலவி வருவதாக தகவல்கள் வருகின்றன. அதுமட்டுமல்லாமல் இரு கட்சிகளுக்கு இடையே சில ஈகோ பிரச்சனை இருந்து வருவதாக கூட சோஷியல் மீடியாவில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் அது எந்தளவிற்கு உண்மையான தகவல் என தெரியவில்லை.



இருப்பினும் தமிழகத்தை போலவே புதுச்சேரியிலும் திமுக மற்றும் காங்கிரஸ் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை சூடுபிடித்துள்ளது. விரைவில் இக்கூட்டணி இணைய வேண்டும் ? என்பது தான் இரு கட்சி ஆதரவாளர்களின் ஆசையாக இருந்து வருகின்றது. இன்னும் ஓரிரு நாட்களில் புதுச்சேரியில் திமுக மற்றும் காங்கிரஸ் இடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த பேச்சுவார்த்தையில் யார் தலைமையில் கூட்டணி அமையும் என்ற முடிவும், தொகுதிப்பங்கீடு இறுதி முடிவும் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil