Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
எம்.ஜி.ஆர் -ஜெயலலிதா அவர்களின் ஆன்மா ஓபிஎஸ்-ஐ மன்னிக்காது..முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்

எம்.ஜி.ஆர் -ஜெயலலிதா அவர்களின் ஆன்மா ஓபிஎஸ்-ஐ மன்னிக்காது..முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு விமர்சனம்

Samayam Tamil 3 months ago

முன்னாள் முதலமைச்சரான ஓ.பன்னீர் செல்வம் நேற்று தமிழக முதல்வர் முக ஸ்டாலினை சந்தித்து பேசினார். பூங்கோத்து கொடுத்து அவரது ஆட்சியை பாராட்டி மீண்டும் முதல்வராக வேண்டும் என வாழ்த்திவிட்டு வந்தார் ஓ.பன்னீர் செல்வம்.

இவரின் இந்த செயல் அதிமுகவினரை கண்டிப்பாக அதிர்ச்சியில் ஆழ்த்தும் என எதிர்பார்க்கப்பட்டது. கண்டிப்பாக முதல்வர் ஸ்டாலினை ஓபிஎஸ் சந்தித்ததை அதிமுகவினர் ஏற்கமாட்டார்கள், கண்டிப்பாக கண்டனம் தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

அதன்படியே நேற்று அதிமுகவை சேர்ந்த பாப்புலர் முத்தையா அதிமுக தொண்டர்கள் சார்பாக ஓபிஎஸ் அவர்களுக்கு கண்டனம் தெரிவித்தார். ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தியது துரோகத்தின் உச்சம் என கூறி கண்டனங்களை தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து தற்போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு ஓபிஎஸ் முக ஸ்டாலினை சந்தித்ததை விமர்சித்து பேசியுள்ளார்.

அவர் பேசியது, ஓபிஎஸ் முதலமைச்சர் முக ஸ்டாலினை சந்தித்ததிலோ அல்லது திமுகவில் இணைவதிலோ எங்களுக்கு மாறுபட்ட கருத்து என எதுவும் இல்லை. அது அவரின் தனிப்பட்ட விருப்பம். ஆனால் அவர் சொன்ன வார்த்தைகள் தான் கண்டனத்திற்கு உண்டாகியிருக்கிறது. புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆசியோடும், புரட்சி தலைவி ஜெயலலிதா அவர்களின் ஆசியோடும் முக ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் என கூறியிருக்கின்றார்.

இந்த கருத்தை முதலில் ஓபிஎஸ் மனசாட்சியே ஒப்புக்கொள்ளாது, மனசாட்சிக்கு விரோதமா பேசுகின்றார் ஓபிஎஸ். இவர் இப்படி பேசியதால் புரட்சி தலைவரின் ஆன்மாவும் புரட்சி தலைவியின் ஆன்மாவும் அவரை ஒருபோதும் மன்னிக்காது. கண்டிப்பாக இப்படி பேசியதற்கு அவருக்கு தண்டனை உண்டு. தன் அரசியல் லாபத்திற்காக தான் முதல்வரை சந்தித்தேன், திமுகவில் இணைந்தேன் என கூறியிருந்தார் என்றால் அதில் எங்களுக்கு எந்த ஒரு மாற்று கருத்தும் இல்லை.

ஆனால் இவ்வாறு எம். ஜி. ஆர், ஜெயலலிதாஅவர்களின் ஆசியோடு முக ஸ்டாலின் மீண்டும் முதல்வராவார் என கூறியது கண்டனத்திற்கு உரியது. தமிழ்நாட்டில் மூன்று முறை முதல்வராக இருந்துள்ளார் ஓ.பன்னீர் செல்வம். புரட்சி தலைவி அம்மா ஜெயலலிதா அவர்களால் அடையாளம் கொடுக்கப்பட்டவர் தான் ஓபிஎஸ். அம்மா ஜெயலலிதா அவர்கள் முதல் தேர்தலில் போட்டியிட்டபோது அவர்களுக்கு எதிராக செயல்பட்டவர் ஓபிஎஸ்.

1989 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக வாக்கு சேகரித்தனர் ஓபிஎஸ். புரட்சி தலைவரின் மறைவிற்கு பிறகு ஜெயலலிதாவை எதிர்த்து தீவிரமாக பிரச்சாரம் செய்தார் ஓபிஎஸ். ஆனால் அதையெல்லாம் மறந்து மன்னித்து ஜெயலலிதா அவர்கள் ஓபிஎஸ்சிற்கு அதிமுக கட்சியில் பொறுப்பு கொடுத்தார். படிப்படியாக கட்சியில் அவரை முன்னேற வைத்தார். 2001 ஆம் ஆண்டு ஓ.பன்னீர் செல்வத்தை எம்.எல்.ஏவாக்கி அதன் பிறகு அமைச்சராக உருவாக்கினார் அம்மா

ஒருகட்டத்தில் ஜெயலலிதா அவர்களால் முதலமைச்சராக தொடர முடியாத சமயத்தில் ஓபிஎஸ் அவர்களை தான் முதல்வர் நாற்காலியில் அமர செய்தார். அதற்கெல்லாம் இதுதான் நன்றிக்கடனா ? என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுபேசியிருக்கிறார். இதுபோல ஓபிஎஸ் -முதல்வர் முக ஸ்டாலின் சந்திப்பு குறித்து அதிமுகவினர் கடும் விமர்சனங்களை வழங்கி வருகின்றனர்.



மறுபக்கம் திமுக தோழமை கட்சிகள் ஓபிஎஸ் செய்கையை வரவேற்று பேசுகின்றனர். மதிமுக கட்சி தலைவர் வைகோ, நேற்றே ஓபிஎஸ் திமுகவிற்கு வந்துவிட்டார் என கூறியிருக்கின்றார். ஆனால் இன்னும் ஓபிஎஸ் திமுக கூட்டணியில் இணைவது குறித்து உறுதியாக எந்த ஒரு தகவலையும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil