ரசிகையின் பாசம்: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு நாடு முழுவதும் ஏகப்பட்ட ரசிகைகள் இருக்கிறார்கள். ஷாருக்கானின் காதல் படங்களை பார்த்து கொண்டாடுகிறார்கள்.
இந்நிலையில் கர்நாடக மாநிலம் மங்களூரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் ஷாருக்கான்.
அவரை பார்க்கும் ஆசையில் அந்த நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள், ரசிகைகள் வந்தார்கள். அப்படியொரு ரசிகை தன் கணவருடன் வந்திருந்தார். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு ஷாருக்கான் பதில் அளித்தபோது அந்த ரசிகையும் கேள்வி கேட்டார். ஆனால் கேள்வி கேட்பதற்கு முன்பு ஐ லவ் யூ ஷாருக்கான், என் கணவரை விட உங்களை ரொம்ப லவ் பண்றேன் என்றார். தன் அருகில் நின்று கொண்டிருந்த கணவரை காட்டி, இவரை விட உங்களை லவ் பண்ணுகிறேன் என்றார். அந்த இளம் ரசிகை கூட்டத்தில் சொன்னது ஷாருக்கானுக்கு சரியாக கேட்கவில்லை. என்ன சொன்னீர்கள் என்று கேட்க, மீண்டும் பயங்கரமாக கத்தி சொல்ல அங்கிருந்தவர்கள் எல்லாம் கைதட்டி சிரித்தார்கள்.
அதை கேட்ட ஷாருக்கான் சிரித்துவிட்டு, இதை நீங்கள் என்னிடம் தனியாக சொல்லியிருக்க வேண்டும். நீங்கள் சீரியஸாக இல்லை பேச்சுக்காக சொல்கிறீர்கள் என்பது எனக்கு தெரியும். எனக்கு உங்கள் ஃபீலிங் புரிகிறது. உங்களின் கணவருக்கும் புரியும் என்று நம்புகிறேன். உங்கள் எல்லோரையும் லவ் பண்ணுகிறேன். உங்கள் கணவரை லவ் பண்றேன். உங்கள் குடும்பத்தை லவ் செய்கிறேன் என்றார்.
நெட்டிசன்ஸ் விமர்சனம்: நாளைக்கு வியாழக்கிழமை என்பது மாதிர ஐ லவ் யூ சொல்வது சாதாரணமாகிவிட்டது. அதனால் அந்த திருமணமான பெண் சொன்ன விஷயத்தை புரிந்து கொண்டு பதில் அளித்துவிட்டார் ஷாருக்கான். இந்நிலையில் அந்த பெண்ணின் கணவர் பாவம் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள். நாம் எல்லாம் எப்படி வேலைக்கு சென்று சம்பாதிக்கிறோமோ, அது போன்று தான் நடிகர்கள் படங்களில் நடித்து சம்பாதிக்கிறார்கள். அவர்களுக்கு ரசிகர்களாக இருப்பதில் தவறு இல்லை. ஆனால் அந்த பாசம் அளவு கடந்து போவது தான் தவறு என்று சமூக வலைதளங்களில் தெரிவித்திருக்கிறார்கள்.
மங்களூர் போன்ற சிறு ஊரை சேர்ந்தவர்கள் உங்கள் அளவுக்கு வாழ்க்கையில் வெற்றி பெற முடியுமா என அந்த ரசிகை கேட்டார். அதற்கு ஷாருக்கானோ, சின்சியராக வேலை செய்தால் வெற்றி நிச்சயம். never give up என்று தெரிவித்தார்.
ஷாருக்கானுக்கு எடுத்த எடுப்பில் எல்லாம் வெற்றி கிடைத்துவிடவில்லை. சின்னத்திரையில் நடிக்க ஆரம்பித்து பெரிய திரைக்கு வந்து கடினமாக உழைத்து தான் சூப்பர் ஸ்டார் ஆனார்.
கிங், ஜெயிலர் 2: தற்போது அவர் கிங் படத்தில் நடித்து வருகிறார். சித்தார்த் ஆனந்த் இயக்கி வரும் கிங் படத்தில் ஷாருக்கானின் அன்பு மகள் சுஹானா நடிக்கிறார். ஆர்ச்சீஸ் மூலம் நடிக்க வந்த சுஹானா கானுக்கு கிங் மூலம் பெரிய பிரேக் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.
கிங் படத்திற்காக புது லுக்கில் இருப்பதால் ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டு நெல்சனிடம் நோ சொன்னார் ஷாருக்கான். அதன் பிறகே அந்த கதாபாத்திரத்தில் ரித்திக் ரோஷனை நடிக்க வைத்திருக்கிறார்கள்.

