Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
எஸ்.பி வேலுமணி-EPS சமரசம் கைகூடியதா.. தேர்தலுக்குப் பின் அதிமுகவில் நடந்தது என்ன?

எஸ்.பி வேலுமணி-EPS சமரசம் கைகூடியதா.. தேர்தலுக்குப் பின் அதிமுகவில் நடந்தது என்ன?

Samayam Tamil 2 months ago

மிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி 2026 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் நடந்தது இதில் யாரும் எதிர்பாராத வகையில் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்தது.

இரண்டாவது இடத்தில் திமுகவும், 47 இடங்களை மட்டுமே வெற்றி பெற்று அதிமுக மூன்றாவது இடத்தை அடைந்தது. இது அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், தோல்விக்கான காரணத்தை ஆய்வு செய்ய பொது குழு கூட்ட வேண்டும் என்றும், பொதுச் செயலாளரை மாற்ற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக அதிமுகவின் போர் கொடி தூக்கினர்.

சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வி

இதனால், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஊரணியாகவும் எஸ் பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்தது. மேலும் சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி ஆட்சி அமைக்க திமுக விடம் ஆதரவு கேட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். மேலும் அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்றும் தமிழகத்தின் மீண்டும் அதிமுக ஆட்சி மலர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். குறிப்பாக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியிடம் வேலுமணி தரப்பு அணியினர் வலியுறுத்தினர்.


இதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி அவர்களின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில், விஜயின் தமிழக வெற்றிக்கழக தலை மேலான அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது அதிமுக இரு பிரிவுகளாக வாக்களித்தது அப்போது எஸ்.பி வேலுமணி மற்றும் சி.வி சண்முகம் தரப்பை சேர்ந்த 25 எம்எல்ஏக்கள் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனை எடுத்து தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்களின் கட்சி பதவியை எடப்பாடி பழனிசாமி பறித்தார்.

முன்றாக உடைந்த அதிமுக

இதனைத் தொடர்ந்து கட்சி கொரோனா உத்தரவை மீறி செயல்பட்டதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சபாநாயகர் இடம் எடப்பாடி பழனிசாமி திறப்பு மனு அளித்தது. இந்த சூழலில் தான் சீவி சண்முகம் தர பேசியிருந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்தனர். பின்னர் தமிழக வெற்றிக் கழகத்தில் உடனடியாக இணைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தமிழக வெற்றிக் கழக அரசு குதிரை பேரம் நடத்துவதாக எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனத்தை முன் வைத்தது. இதனைத் தொடர்ந்து எஸ் பி வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் அணியில் இருந்த 5 எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமியை தெரிவித்து ஆதரவு தெரிவித்தனர்.

ஓங்கிய எடப்பாடி பழனிசாமியின் கை

இதனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பக்கம் பலம் பெருகிறது. தொடர்ந்து இதுபோன்ற முரண்பாடுகள் நீடித்தால் கட்சிக்கு ஆபத்து என்று கூறி வந்தனர். இதனால், எடப்பாடி பழனிசாமி கட்சி நிர்வாகிகளின் கோரிக்கைகளை பரிசிலிப்பதாக தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பினர் இடையேயான சமரச முயற்சி கைகூடியுள்ள நிலையில் இரு தரப்பினரும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர் அலுவலகத்தில் ஒன்றாக கடிதம் அளித்தனர்.

எடப்பாடி பழனிசாமியை அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக நியமிக்கக் கோரி சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். மேலும் அதிமுக கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியை நியமிக்கக் கோரி சபாநாயகரிடம் மனு அளித்தனர். சமரச முயற்சி கைகூடியதால் எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ் பி வேலுமணி தரப்பினர் ஒன்றாக இணைந்து சபாநாயகரை சந்தித்து பேசினர். ஆனால் இந்த நிகழ்வில் சி.வி சண்முகம் மட்டும் பங்கேற்கவில்லை.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil