முத்தரப்பு தொடரில் பங்கேற்று வரும் இந்திய ஏ அணியை திலக் வர்மாதான் வழிநடத்தி வருகிறார். இவர், இந்திய டி20 அணிக்கு துணைக் கேப்டனாகவும் இருக்கிறார்.
இந்நிலையில், முத்தரப்பு ஒருநாள் தொடரில், வெற்றியைப் பெற வாய்ப்பு பிரகாசமாக இருந்தும், சொதப்பலாக கேப்டன்ஸி செய்து, அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக திலக் வர்மா அமைந்துள்ளார்.
என்ன நடந்தது: இலங்கை ஏ, இந்தியா ஏ அணிகள் சரியாக 265 ரன்களை அடித்ததால், ஆட்டம் டிரா ஆனது. இதனைத் தொடர்ந்து, சூப்பர் ஓவர் வரை போட்டி சென்ற நிலையில், அதில் முதலில் களமிறங்கிய இலங்கை ஏ அணி 16 ரன்களை அடித்தது. இதனைத் தொடர்ந்து, இந்திய ஏ அணியில், ஓபனர்களாக சூர்யான்ஸ் செட்ஜ் மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோர் ஓபனர்களாக இருந்தனர்.
இதில், சூர்யவன்ஷிதான் ஸ்ட்ரைக்கில் இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில், சூர்யான்ஸ் செட்ஜை ஸ்ட்ரைக்கில் நிற்க வைத்தனர். இவர், முதல் மூன்று பந்துகளில் 3 ரன்களை மட்டுமே அடித்த நிலையில், அடுத்து 4ஆவது பந்தில் சூர்யவன்ஷிக்கு ஸ்ட்ரைக் கிடைத்தது. இந்த 3 பந்துகளில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சூர்யவன்ஸி 2, 4 என முதல் இரண்டு பந்துகளில் 6 ரன்களை அடித்தார். அடுத்து கடைசி பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. சூர்யவன்ஷியால் ரன்களை அடிக்க முடியவில்லை.
இதனால், இலங்கை ஏ அணி சூப்பர் ஓவரில் வென்று, த்ரில் வெற்றியைப் பெற்றது.
இந்திய அணிக்கு பிரச்சினை: இந்திய அணி, முதல் 3 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியை மட்டுமே பெற்றுள்ளது. முதல் போட்டியில், இலங்கை ஏ அணிக்கு எதிராக, 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில், அடுத்த போட்டியில், டிஎல்எஸ் முறைப்படி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதனைத் தொடர்ந்து, மூன்றாவது போட்டியில், தற்போது சூப்பர் ஓவர் வரை போராடி, இலங்கை ஏ அணிக்கு எதிராக தோல்வியை சந்தித்தது.
இதனால், இந்திய ஏ அணி, ஜூலை 17ஆம் தேதி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில், பெரிய நெட் ரன்ரேட் வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
பிசிசிஐ கடும் அதிருப்தி: இந்நிலையில், இந்திய ஏ அணியை வழிநடத்தும் கேப்டன் திலக் வர்மா மீது பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இலங்கை ஏ அணிக்கு எதிரான சூப்பர் ஓவரில், சூர்யவன்ஷியை ஸ்ட்ரைக்கில் ஆட வைக்காமல், சூர்யான்ஸை ஸ்ட்ரைக்கில் ஆட வைத்ததால்தான், இந்திய ஏ அணி தோற்றிருப்பதாக, பிசிசிஐ கடும் அதிருப்தியில் இருக்கிறதாம்.
இப்படி, மட்டமாக கேப்டன்ஸி செய்யும் திலக் வர்மாவுக்கு இந்திய டி20 அணியில் திலக் வர்மாவுக்கு துணைக் கேப்டன் பதவியை கொடுத்திருப்பது சரியாக இருக்காது என்ற முடிவுக்கு பிசிசிஐ வந்துள்ளதாம். இதனால், இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு பிறகு, திலக் வர்மாவின் துணைக் கேப்டன் பதவியை பறிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாம். மாற்றாக, சஞ்சு சாம்சன் அல்லது அபிஷேக் சர்மா ஆகியோரில் ஒருவருக்கு துணைக் கேப்டன் பதவியை கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

