Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி ஜோர்.. 27 மில்லியன் டன்களுக்கு மேல் உற்பத்தி!

இந்தியாவின் சர்க்கரை உற்பத்தி ஜோர்.. 27 மில்லியன் டன்களுக்கு மேல் உற்பத்தி!

Samayam Tamil 2 weeks ago

ந்தியாவில் சர்க்கரை உற்பத்தி இதுவரை 7.32 சதவீதம் அதிகரித்து 27.52 மில்லியன் டன்களாக உயர்ந்துள்ளது.

இந்திய சர்க்கரை மற்றும் உயிரி எரிசக்தி உற்பத்தியாளர்கள் சங்கம் (ISMA) வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் (ஏப்ரல் 30 வரை) சர்க்கரை உற்பத்தி 25.64 மில்லியன் டன்களாக இருந்தது. சர்க்கரை சந்தை பருவம் சென்ற ஆண்டின் அக்டோபர் மாதம் முதல் இந்த ஆண்டின் செப்டம்பர் வரை நீடிக்கும்.

நம் நாட்டின் மிகப்பெரிய சர்க்கரை உற்பத்தி மாநிலமான மகாராஷ்டிராவில் உற்பத்தி 80.9 லட்சம் டன்களிலிருந்து 99.2 லட்சம் டன்களாகவும், கர்நாடகாவில் 40.4 லட்சம் டன்களிலிருந்து 48 லட்சம் டன்களாகவும் அதிகரித்துள்ளது. இருப்பினும், உத்தரப் பிரதேசத்தில் உற்பத்தி 89.6 லட்சம் டன்களாகக் குறைந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்தில் 92.4 லட்சம் டன்களாக இருந்தது.

2025-26 சந்தைப்படுத்தல் பருவத்தில் எத்தனால் பயன்பாட்டுக்குப் பிறகான மொத்த சர்க்கரை உற்பத்தி 29.3 மில்லியன் டன்களாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2024-25ஆம் ஆண்டில் பதிவான 26.12 மில்லியன் டன்களை விட அதிகமாகும். எத்தனால் திசைதிருப்பல் (Ethanol diversion) என்பது சர்க்கரைக்குப் பதிலாக, எத்தனால் உற்பத்திக்காகக் கரும்புச் சாறு, சர்க்கரை பாகு அல்லது பி-ஹெவி பாகு ஆகியவற்றைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது.

கடந்த ஆண்டு இதே நேரத்தில் 19 சர்க்கரை ஆலைகள் இயங்கி வந்த நிலையில், தற்போது ஐந்து சர்க்கரை ஆலைகள் மட்டுமே செயல்படுவதால் அரவை பணிகள் கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளன. உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் உள்ள அனைத்து ஆலைகளும் முக்கியப் பருவத்திற்காக மூடப்பட்டுள்ளன. இருப்பினும், கர்நாடகாவில் உள்ள சில ஆலைகள் ஜூன் - ஜூலை மாதங்களில் நடைபெறும் சிறப்புப் பருவத்தில் இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்தியா 2047ஆம் ஆண்டுக்குள் வல்லரசாக வேண்டும்.. பொருளாதார வல்லுநர் கொடுத்த அட்வைஸ்!

தமிழ்நாட்டில் உள்ள சில ஆலைகளும் சிறப்புப் பருவத்தில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு மாநிலங்களும் இந்தக் காலகட்டத்தில் சுமார் ஐந்து லட்சம் டன்கள் சர்க்கரையை உற்பத்தி செய்கின்றன. பருவம் முடிவுக்கு வருவதால் சர்க்கரையின் குறைந்தபட்ச விற்பனை விலையை (MSP) விரைவில் திருத்தியமைக்க வேண்டும் எனத் தொழில்துறை கோரிக்கை விடுத்துள்ளது. அதிகரித்து வரும் உற்பத்திச் செலவுகள் மற்றும் ஆலை மட்டத்தில் கிடைக்கும் குறைந்த வருவாய் ஆகியவை பணப்புழக்கத்தில் அழுத்தத்தை ஏற்படுத்துவதாகக் கூறுகின்றனர்.

மேலும், இது கரும்புக்கான செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகள் உயர்வதற்கு வழிவகுப்பதாகவும் தொழில்துறை கூறுகிறது. மகாராஷ்டிராவில் மட்டும் ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை கரும்புக்கான செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 2,130 கோடியை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்த ரூ. 752 கோடியை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாகும்.

தற்போதைய E20 திட்டத்தைத் தாண்டி, எத்தனால் கலப்பு இலக்குகளை E25 மற்றும் E85/E100 போன்ற உயர் நிலைகளுக்கு உயர்த்த வேண்டும் என்று தொழில்துறை அரசை வலியுறுத்தியுள்ளது. மேலும், நெகிழ்வு எரிபொருள் வாகனங்களின் விரைவான விரிவாக்கம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களை முறைப்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது. எத்தனால் கொள்முதல் விலைகளில் செய்யப்படும் தாமதமான திருத்தங்கள், உற்பத்தி ஆலைகளின் திறனை முழுமையாகப் பயன்படுத்தாத நிலைக்கு வழிவகுக்கின்றன என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil