ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்ஸி, எங்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் அளவுக்கு இல்லை என ஐபிஎல் 2026 சீசன் முடிந்ததும், மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங் கோச் கெய்ரன் பொல்லார்ட் தெரிவித்ததால், கடும் அதிருப்தியடைந்த ஹர்திக் பாண்டியா, டிரேடிங்கில் வெளியேற முடிவு செய்தார்.
குறிப்பாக, என்னை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு டிரேடிங்கில் அனுப்பிவிடுங்கள் என ஹர்திக் பாண்டியா தெரிவித்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் நிர்வாகமும், சிஎஸ்கே நிர்வாகத்திடம் பேச ஆரம்பித்தது. மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்தை பொறுத்தவரை ஹர்திக்கிற்கு மாற்றாக ஒரு தரமான இளம் வீரர் வேண்டும் என்பதுதான் டார்கெட்டாக இருக்கிறது.
இதனால், சிஎஸ்கேவை தொடர்புகொண்டு ஷிவம் துபே, ஆயுஷ் மாத்ரே ஆகியோரை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். ஆனால், சிஎஸ்கே நிர்வாகம் இதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. துபேவுடன், கலீல் அகமதுவை மட்டுமே விடுவிக்க முடியும், இளம் வீரரை டிரேடிங்கில் அனுப்ப முடியாது எனத் தெரிவித்ததால், டிரேடிங் பேச்சு வார்த்தை கடும் இழுபறியில் இருக்கிறது.
இந்நிலையில், தற்போது திடீரென்று ஹர்திக் பாண்டியா டிரேடிங்கிற்குள் புகுந்துள்ள டெல்லி கேபிடல்ஸ் நிர்வாகம், ஹர்திக்கை வாங்க எந்த எல்லைக்கும் செல்ல முடிவு செய்துள்ளது. ஹர்திக் பாண்டியாவுக்காக அசுதோஷ் சர்மா, அக்சர் படேல் ஆகியோரை விடுவிக்க முன் வந்துள்ளனர். மேலும், ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பதவியையும் கொடுக்கவும் முடிவு செய்துள்ளனர்.
மும்பை இந்தியன்ஸ் ஹேப்பி: ஹர்திக்கிற்கு மாற்றாக அசுதோஷ் சர்மா மற்றும் அக்சர் படேல் இருவரையும் விடுவிக்க டெல்லி கேபிடல்ஸ் முன் வந்திருப்பதால், இனி டெல்லி கேபிடல்ஸுடன் பேச்சு வார்த்தை நடத்த மும்பை இந்தியன்ஸ் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மும்பை இந்தியன்ஸை பொறுத்தவரை, ஹர்திக்கிற்கு மாற்றாக ஒரு இளம் வீரர் தேவை. அதுவும், அசுதோஷ் சர்மா கிடைத்தால், மும்பை இந்தியன்ஸுக்கு கொண்டாட்டம் தான்.
ரிஷப் பந்த் வருகை: டெல்லி கேபிடல்ஸுக்கு ரிஷப் பந்தும் வர உள்ளார். லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியில் இருந்து வெளியேற விரும்புவதாக ரிஷப் பந்த் தெரிவித்ததால், அவரை டெல்லி கேபிடல்ஸுக்கு அனுப்ப லக்னோ அணி முடிவு செய்துவிட்டது. மாற்றாக, குல்தீப் யாதவை பெற உள்ளனர்.
இந்த டீல் விரைவில், வெற்றிகரமாக முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மட்டும் நடந்துவிட்டால், டெல்லி கேபிடல்ஸ் அணி பேட்டிங் வரிசையில் கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஹர்திக் பாண்டியா என மூன்று தரமான வீரர்கள் இருப்பார்கள். இதனால், டெல்லி கேபிடல்ஸ் பேட்டிங் வரிசை, ஸ்டார் அந்தஸ்தை பெறும்.
இதனால்தான், ஹர்திக் பாண்டியாவை எப்படியாவது வாங்கி, அணியை பலமிக்கதாக கட்டமைக்க டெல்லி கேபிடல்ஸ் முடிவு செய்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில், இதுவரை ஒரு கோப்பையை கூட வெல்லாத அணிகளில், டெல்லி கேபிடல்ஸும் இருக்கிறது. குறிப்பாக, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது கூட அரிதிலும் அரிதாகதான் இருக்கிறது. 19 சீசன்களில் இதுவரை, 6 முறை மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஒரேயொருமுறை மட்டுமே பைனலுக்கு முன்னேற முடிந்தது.
அதுவும் 2020ஆம் ஆண்டில்தான். ஷ்ரேயஸ் ஐயர் கேப்டனாக இருந்தபோது, ஒரேயொருமுறை மட்டுமே பைனலுக்கு முன்னேறியுள்ளனர். அடுத்த மூன்று சீசன்களுக்குள் ஒரு கோப்பையை வென்றாக வேண்டும் என்பதால்தான், தற்போது டெல்லி கேபிடல்ஸ் அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது.

