Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
ஜெயக்குமார் வேண்டுமானால் தவெகவிற்கு வரட்டும்..பதிலடி கொடுத்த செங்கோட்டையன்

ஜெயக்குமார் வேண்டுமானால் தவெகவிற்கு வரட்டும்..பதிலடி கொடுத்த செங்கோட்டையன்

Samayam Tamil 2 months ago

திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி இழுபறியாக போய்க்கொண்டு இருந்தது. ஒருவேளை இவர்களின் கூட்டணி மற்றும் தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக போகவில்லை என்றால் தவெகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்க நேரிடுமா ?

என்ற நோக்கத்தில் பலரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் நேற்று இரவு திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி உறுதியாகி கையெழுத்து போடப்பட்டது. எனவே தற்போது தவெக யாருடன் கூட்டணி வைக்கப்போகின்றனர் என்பது தெரியவில்லை.

மேலும் அவர்கள் கூட்டணி வைத்துக்கொள்வார்களா ? தனித்து போட்டியிடுவார்களா ? என்பது தொடர்பாகவும் எந்த தகவலும் தெளிவாக இல்லை. இதற்கிடையில் நேற்று தஞ்சாவூரில் நடந்த கூட்டத்தில் விஜய் பேசும்போது, திமுகவும் அதிமுகவும் மறைமுகமாக டீலிங் போட்டு தன்னை தடுக்க திட்டம் போடுவதாக பேசியிருந்தார்.

இதனைத்தொடர்ந்து அதிமுகவின் ஜெயகுமாரிடம் விஜய் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கருத்து கேட்கப்பட்டது. அதற்கு ஜெயக்குமார், விஜய் ஒரு சிறப்பான நடிகர். அவர் எழுதி கொடுத்த ஸ்கிரிப்ட்டை பேசிக்கொண்டு இருக்கின்றார். அவர் ஒரு நடிகர் என்பதால் எழுதி கொடுத்த ஸ்கிரிப்ட்டை எப்படி பேசவேண்டும் என்பது நன்கு தெரியும். ஆதவ் மற்றும் அருண் தான் அவருக்கு ஸ்கிரிப்ட் எழுதி அவரை டைரக்ட் செய்கின்றனர்.

இவர் அவர்கள் எழுதிக்கொடுத்ததை பேசிவிட்டு நடிக்கும் ஒரு நடிகராக இருக்கின்றார். இப்பொழுது நீங்கள் என்னிடம் கேள்வி கேட்கின்றீர்கள், நான் பதில் சொல்கின்றேன். இதுபோல அவர் ஒரு பிரஸ் மீட் நடத்த வேண்டியது தானே ? ஏன் ப்ரீஸ் மீட் நடத்த மாட்றாரு. விஜய் அங்கு சுற்றி இங்கு சுற்றி தற்போது எங்கள் பக்கம் திரும்பியிருக்கிறார். வீணாய் எங்கள் பக்கம் திரும்பினால் வாங்கி கட்டிக்க வேண்டியது தான் என பேசி விஜய்யை விமர்சித்தார் ஜெயக்குமார்.

இந்நிலையில் ஜெயக்குமாரின் விமர்சனம் குறித்து தவெக செங்கோட்டையனிடம் கருத்து கேட்கப்பட்டது. விஜய்யின் தவெகவுடன் தற்போது யாருமே கூட்டணிக்கு செல்லவில்லை. தற்போது தவெக அதிமுகவுடன் சேர பார்த்துக்கொண்டு இருக்கின்றனர் என ஜெயக்குமார் கூறியது குறித்து செங்கோட்டையனிடம் கருத்து கேட்கப்பட்டது.

அதற்கு செங்கோட்டையன், ஜெயக்குமார் வேண்டுமானால் தவெகவிற்கு வரலாம். ஏன்னென்றால் அதிமுகவில் ஜெயகுமாருக்கு எப்படியும் கண்டிப்பாக சீட் கிடைக்கபோவது இல்லை. அவருடைய மகனுக்கு தான் அங்கு சீட் கிடைக்கும். அந்த ஆதங்கத்தில் அவர் பேசிக்கொண்டு இருக்கின்றார். அவர் எனக்கு நல்ல நண்பர். எனவே அவரின் இந்த கருத்திற்கு எல்லாம் பதில் கொடுக்க முடியாது. மனதில் தோன்றுவதை ஒவ்வொருவரும் பேசிக்கொண்டு இருக்கின்றனர்.

என்றைக்குமே தணிந்து நின்று போட்டியிட்டு முதலமைச்சராவது தான் தலைவர் விஜய்யின் எண்ணம். எனவே மற்றவர்களிடம் வாக்கு கேட்கின்ற அளவிற்கு அவர் இல்லை. 18 வயது முதல் 45 வயது வரை இருப்பவர்களின் மனநிலையை மற்றவர்கள் புரிந்துகொண்டு பேசவேண்டும். அவர்கள் எல்லாம் மாற்றத்தை விரும்பிக்கொண்டு இருக்கின்றனர் என்றார் செங்கோட்டையன்.



மேலும் ஜெயக்குமார் தவெகவிற்கு வந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என செங்கோட்டையனிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், முதலில் ஜெயக்குமார் வரட்டும், அவர் எனக்கு நல்ல நண்பர். இருந்தாலும் அவர் முதலில் தவெகவிற்கு வருவதாக சொல்லட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்றார். இவ்வாறு அதிமுகவின் ஜெயக்குமாரின் விமர்சனங்களுக்கு தவெகவின் செங்கோட்டையன் பதிலடி கொடுத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil