Dailyhunt
மகளை முதல் முறையாக கோவிலுக்கு அழைத்துச் சென்ற த்ரிஷா: அந்த செல்லம் போஸ் கொடுக்கிறத பாருங்களேன்

மகளை முதல் முறையாக கோவிலுக்கு அழைத்துச் சென்ற த்ரிஷா: அந்த செல்லம் போஸ் கொடுக்கிறத பாருங்களேன்

Samayam Tamil 2 weeks ago

கோவிலில் த்ரிஷா: இன்ஸ்டாகிராமில் த்ரிஷா கிருஷ்ணனை போன்றே அவரின் மகள் இஸ்ஸி கிருஷ்ணனுக்கும் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள்.

திரையுலக பிரபலங்கள் பலர் இஸ்ஸியை இன்ஸ்டாகிராமில் ஃபாலோ செய்கிறார்கள். இந்நிலையில் இஸ்ஸியை முதல் முறையாக கோவிலுக்கு அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்திருக்கிறார் த்ரிஷா கிருஷ்ணன்.

கோவில் புகைப்படத்தையும், இஸ்ஸியுடன் சேர்ந்து தான் போஸ் கொடுத்த புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் த்ரிஷா. இஸ்ஸியின் முதல் கோவில் விசிட் என்று கேப்ஷன் போட்டு அதே புகைப்படத்தை மகளின் இன்ஸ்டா ஸ்டோரியிலும் போஸ்ட் செய்துள்ளார்.

அம்மா த்ரிஷாவும், மகள் இஸ்ஸியும் கோவிலுக்கு போயி சாமி கும்பிட்டிருக்கிறார்களாம். அச்சோ செம க்யூட். இஸ்ஸி குட்டி நாளுக்கு நாள் க்யூட்டாகிக் கொண்டே போகிறது என்று நாய் பிரியர்கள் நெகிழ்ந்துவிட்டார்கள். த்ரிஷா இன்று இன்ஸ்டாவில் ஸ்டோரி எதுவும் போடவில்லையா என்று தேடிச் சென்றவர்களுக்கு ஒன்றல்ல இரண்டு புகைப்படங்கள் கிடைத்ததும் மகிழ்ச்சியாகிவிட்டார்கள்.

ஸ்டோரி தான்: த்ரிஷாவுக்கு இன்ஸ்டாவில் போஸ்ட் போடுவதை விட ஸ்டோரி போடத் தான் பிடிக்கும் போன்று. அதிலும் குறிப்பாக மகள் வந்த பிறகு ஏகப்பட்ட ஸ்டோரி போடுகிறார். இஸ்ஸியை குளிக்க வைத்தால், அதனுடன் விளையாடினால் அதை வீடியோ எடுத்து வெளியிடுகிறார். இப்படி ஜாலியாக ஸ்டோரி போடும் த்ரிஷா, அண்மையில் நாய் பிரியர்கள் ஒரு லூப்பில் விரும்பி சிக்குவது குறித்து வீடியோ வெளியிட மகன் ஜோரோ நினைவு வந்துவிட்டதா என்று ரசிகர்கள் கவலை அடைந்தார்கள்.

ஒரு நாய் தானே இறந்துவிட்டது என்று இல்லாமல் பெத்த பிள்ளையை பறிகொடுத்தது போன்று கவலை அடைவார்கள் நாய் பிரியர்கள். அப்படித் தான் ஜோரோ

இறந்தபோது என் மகன் போயிட்டான், என் வாழ்க்கையில் எல்லாமே போய்விட்டது என்று இடிந்து போய்விட்டார் த்ரிஷா. ரசிகர்களும் எவ்வளவோ ஆறுதல் சொல்லியும் பலனில்லை. அந்த நேரத்தில் தான் த்ரிஷா வாழ்க்கையில் வந்தது இஸ்ஸி.

ஜோரோவை போன்றே இஸ்ஸியும் ஒரு நாள் இறந்துவிடும். அந்த நாள் தனக்கு மீண்டும் இதயம் நொறுங்கிவிடும் என்று த்ரிஷாவுக்கு நன்கு தெரியும். இருந்தாலும் தனியாக இருக்கப் பிடிக்காமல் அந்த செல்லத்தின் அன்பு மழையில் சந்தோஷப்பட முடிவு செய்து தான் தன் வீட்டிலும், மனதிலும் இடம் கொடுத்தார் த்ரிஷா.

என்ன தான் இஸ்ஸி வந்து ஓராண்டாகிவிட்டாலும், ஜோரோவால் ஏற்பட்ட வெற்றிடம் அப்படியே இருப்பது த்ரிஷாவின் இன்ஸ்டா ஸ்டோரிகளில் இருந்தே தெரிகிறது. மகளின் பிறந்தநாளை மகனின் கல்லறைக்கு முன்பு கொண்டாடியது நினைவிருக்கலாம். அவர் ஜோரோவை பற்றி ஸ்டோரி போடும் போது எல்லாம் ரசிகர்களுக்கு ஒரு மாதிரி ஆகிவிடுகிறது.
பர்த்டே, கருப்பு: த்ரிஷாவின் 43வது பிறந்தநாள் மே மாதம் 4ம் தேதி வருகிறது. அதற்கு இன்னும் ஒரு மாதம் இருந்தாலும் தற்போதே நாட்களை எண்ணுகிறார்கள் ரசிகர்கள். கெரியரை பொறுத்தவரை தான் நடித்த கருப்பு பட ரிலீஸுக்காக காத்திருக்கிறார்.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா ஹீரோவாக நடித்திருக்கும் அந்த படத்தின் ரிலீஸ் தள்ளித் தள்ளிப் போய் மே 14ம் தேதி திரைக்கு வருகிறது. வலிமை அப்டேட்டை அடுத்து அதிகமாக கேட்கப்பட்டது கருப்பு அப்டேட் தான் என ஆர்.ஜே. பாலாஜியே தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.பல ஆண்டுகள் கழித்து சூர்யா, த்ரிஷா கிருஷ்ணன் ஜோடியை திரையில் பார்க்கப் போகிறார்கள் சினிமா ரசிகர்கள்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil