Dailyhunt
manimoortheeswaram Ganapathy temple ஆசியாவிலேயே பிரம்மாண்டமான விநாயகர் கோவில் எங்குள்ளது தெரியுமா?

manimoortheeswaram Ganapathy temple ஆசியாவிலேயே பிரம்மாண்டமான விநாயகர் கோவில் எங்குள்ளது தெரியுமா?

Samayam Tamil 1 week ago

லகம் முழுவதும் உள்ள சைவ, வைணவ ஆலயங்களில் எதையும் எடுத்துக் கொண்டாலும், முதலில் வழிபடப்படுவது முழுமுதற் கடவுள் விநாயகப் பெருமான் தான்.

எந்த நல்ல காரியத்தையும் தொடங்குவதற்கு முன் "பிள்ளையார் சுழி" போடும் அந்த ஆன்மீக மரபு, காலங்களாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
ஆனால், விநாயகருக்கென தனியே அமைந்த ஆலயங்கள் பல இருந்தாலும், அவற்றில் அரிதான திருக்கோலம், அபூர்வ வரலாறு, பிரம்மாண்ட கட்டிட அமைப்பு ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்துக் கொண்ட ஒரு தலம் இருக்கிறது. அது தான் மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி ஆலயம்.

தாமிரபரணி கரையில் விநாயகர் ஆலயம் :

புனிதமான தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ஆலயம், சுமார் 1000 ஆண்டுகள் பழமையானது என்று கூறப்படுகிறது.
80 மீட்டர் நீளம்
40 மீட்டர் அகலம்
5 நிலை ராஜகோபுரம்
3 பிரகாரங்கள்
8 மண்டபங்கள்
என்று விரிந்த பரப்பில் அமைந்துள்ளதால், ஆசியாவிலேயே மிகப்பெரிய விநாயகர் ஆலயங்களில் ஒன்றாக மதிக்கப்படுகிறது.

"மணி" ஒலித்த அதிசய மரபு :

இந்த ஊரின் பெயர் "மணிமூர்த்தீஸ்வரம்" என வந்ததற்கும் ஒரு அழகான வரலாறு உள்ளது. ஒருகாலத்தில், நெல்லையப்பர் கோயில் ஆலயத்தில் பூஜை நடக்கும் போது அங்குள்ள பெரிய மணி ஒலிக்கும். அந்த ஓசையை கேட்டவுடன், இங்கும் மணி அடித்து விநாயகரை வழிபடும் மரபு இருந்தது. அந்த "மணி ஒலி வழிபாடு" காரணமாக "மூர்த்தீஸ்வரம்" - "மணிமூர்த்தீஸ்வரம்" என்று பெயர் மாறியது. அந்த நாளிலிருந்து இங்கு உள்ள விநாயகர் "மூர்த்தி விநாயகர்" என்றும் அழைக்கப்படுகிறார்.

உச்சிஷ்ட கணபதி - அரிய திருக்கோலம் :

விநாயகரின் 32 வடிவங்களில் எட்டாவது வடிவம் தான் உச்சிஷ்ட கணபதி. இங்கு அவர் ஒரு மிக அரிய திருக்கோலத்தில் காட்சி தருகிறார். தனது தேவியான ஸ்ரீ வல்லபையை இடது தொடையில் அமர வைத்தபடி, 6 கைகள் உடன் கைகளில் நீலோற்பலம், மாதுளம் பழம், வீணை, நெற்கதிர், அட்சமாலை ஒரு கையால் தேவியை அணைத்தபடி இந்த திருக்கோலம் இணைவு, செழிப்பு, குடும்ப அமைதி ஆகியவற்றின் அடையாளமாக கருதப்படுகிறது.

சூரியன் தரிசிக்கும் அற்புதம் :

ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் 1, 2, 3 தேதிகளில் காலை நேரத்தில் சூரிய பகவானின் கதிர்கள் நேராக விநாயகரைத் தொட்டு வழிபடும் அரிய நிகழ்வு நடைபெறுகிறது. அந்த நேரத்தில் விநாயகர் தங்கம் போல ஜொலிப்பார். இந்த தரிசனம் கிடைத்தால் துன்பங்கள் நீங்கும். வாழ்க்கையில் ஒளி பிறக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

வேண்டுதல் நிறைவேறும் தலம் :

இந்த ஆலயத்தில் வழிபட்டால் புத்திரபேறு கிடைக்கும். கணவன்-மனைவி ஒற்றுமை வளரும். திருமணத் தடைகள் நீங்கும். பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்று பக்தர்கள் அனுபவமாக பகிர்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு 10 நாட்கள் பெரிய திருவிழா நடைபெறும். இந்த காலத்தில் உச்சிஷ்ட கணபதியை வழிபட்டால் செல்வம், வளம், வெற்றி அனைத்தும் சேரும் என்று நம்பப்படுகிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil