கடந்த மாத இறுதியில் இத்தாலிய தொலைக்காட்சி ஒன்றிற்குப் பேட்டியளித்த டிரம்ப்,ஜி7 மாநாட்டின் போது என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள மெலோனி கெஞ்சினார்.எனக்குப் பாவமாக இருந்ததால் தான் நான் சம்மதித்தேன் என்று கூறியிருந்தார்.
இது உலக நாடுகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
ஈரான் போருக்கு இத்தாலி மறுப்பு- டிரம்ப் அதிருப்தி
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த மெலோனி டிரம்ப் சொல்வதெல்லாம் அப்பட்டமான பொய் என்று மறுத்தார். மேலும் ஒரு போதும் நானும் , இத்தாலியும் கெஞ்ச மாட்டோம் என்று கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனால் கோபமடைந்த டிரம்ப், ஐரோப்பாவின் முக்கிய வலதுசாரித் தலைவர்களில் ஒருவரான மெலோனியுடன் தனிப்பட்ட முறையில் மோதத் தொடங்கினார். இதனைத் தொடர்ந்து, அண்மையில், அமெரிக்கா செல்ல திட்டமிட்டிருந்த தனது பயணத்தை இத்தாலி வெளியுறவுத் துறை அமைச்சர் ரத்து செய்தார்
இந்த மோதல் முற்றிப்போன நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் பக்கத்தில் ஒரு மார்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தைப் பகிர்ந்தார். அதில் மெலோனி தன்னை ஆசையோடு பார்ப்பது போல எடிட் செய்து இவரிடமிருந்து தப்பிக்க எனக்கு தடை உத்தரவு தேவைப்படுகிறது என்று கிண்டலாகப் பதிவிட்டிருந்தார். இந்த நிகழ்வு இரு தரப்புக்கும் இடையேயான உறவில் கூடுதல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இந்த நிலையில் துருக்கி அதிபர் தயிப் எர்டோகனுடனான சந்திப்பின் போது, மெலோனிக்கு எதிராக சமூக ஊடகங்களில் டிரம்ப் போட்ட 'ரெஸ்ட்ரெய்னிங் ஆர்டர்' (தடை உத்தரவு) பதிவு குறித்து செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த டிரம்ப் எங்கள் இருவருக்குள்ளும் சுமுகமான உறவு இல்லை. எங்களுக்கு உதவ அவர் மறுத்ததால், உறவில் கொஞ்சம் கசப்பு ஏற்பட்டுவிட்டது என்றார்.
மேலும் ஹார்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் தலையிட அவர் மறுத்துவிட்டார். இன்னும் சுருக்கமாகச் சொன்னால் ஈரான் போரில் ஈடுபட அவர் தயாராக இல்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.ஹார்முஸ் ஜலசந்தியில் நடந்த ராணுவ நடவடிக்கைகளில் இத்தாலி பங்கேற்காதது மெலோனி செய்த "பெரிய தவறு" என்றும் டிரம்ப் சாடினார்.
அவர்களுக்குத் தேவையான பெரும்பாலான கச்சா எண்ணெய் அங்கிருந்துதான் கிடைக்கிறது. ஆனால், எங்களுக்கு அங்கிருந்து எண்ணெய் தேவையில்லை, எங்களிடமே தாராளமாக எண்ணெய் உள்ளது என்றும் அவர் வாதாடினார்.இருப்பினும், பேட்டியின் இறுதியில் எனக்கு அவரைப் பிடிக்கும். உண்மையில் அவர் ஒரு நல்ல மனிதர். என்றும் கூறி மழுப்பினார். இதன் மூலம்இத்தாலி பிரதமர் மெலோனியை டொனால்ட் டிரம்ப் வம்புக்கு இழுத்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நேட்டோ அமைப்பின் மீது டிரம்ப் அதிருப்தி
துருக்கி தலைநகர் அங்காராவில் நடக்கும் இந்தச் சந்திப்பிற்கு முன்னதாகவே, ஐரோப்பிய நேட்டோ (NATO) நாடுகள் மீது டிரம்ப் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். இதனால், பாதுகாப்புத் துறைக்கான தங்களின் நிதி ஒதுக்கீட்டை அதிகரித்துக் காட்டி டிரம்பைக் கூல் செய்ய நேட்டோ கூட்டணிகள் முயன்று வருகின்றன.
துருக்கி அதிபரின் பிரம்மாண்ட மாளிகையில் எர்டோகனுக்கு அருகில் அமர்ந்துகொண்டு பேசிய டிரம்ப், "நேட்டோ அமைப்பின் மீது எனக்குப் பெரிய ஏமாற்றம் உண்டு. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், இந்த மாநாடு துருக்கியில் நடக்காமல் இருந்திருந்தால் நான் இதில் பங்கெடுத்திருக்கவே மாட்டேன். ஏெனில், எனது நண்பர் எர்டோகன் ஒரு வலிமையான தலைவர், சிறந்த மனிதர்" என்று புகழ்ந்தார்.
இரண்டு நாட்கள் நடக்கும் இந்த மாநாட்டில், பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்புள்ள ராணுவத் திட்டங்களை ஐரோப்பிய நாடுகள் காட்சிப்படுத்தவுள்ளன. இதன் மூலம், "நாங்கள் நேட்டோவை வலுப்படுத்த ஐரோப்பாவை வலிமையாக்கி வருகிறோம்" என்பதை டிரம்பிற்கு நிரூபிக்க அவை திட்டமிட்டுள்ளன.

