Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
MI, KKR Trading - ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக, MI கேட்கும் வீரரை விட்டுக்கொடுக்க மறுக்கும் கேகேஆர்

MI, KKR Trading - ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்றாக, MI கேட்கும் வீரரை விட்டுக்கொடுக்க மறுக்கும் கேகேஆர்

Samayam Tamil 1 week ago

மும்பை இந்தியன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியாவை டிரேடிங் செய்துவிட்டு, மாற்றாக தரமான வீரரை வாங்க முடிவு செய்துள்ளது.

இதனால், சென்னை சூப்பர் கிங்ஸை தொடர்புகொண்டு ஆயுஷ் மாத்ரே, ஷிவம் துபே ஆகியோரை கேட்ட நிலையில், ஆயுஷ் மாத்ரேவை விட்டுக்கொடுக்க முடியாது எனத் தெரிவித்ததால், கேகேஆர் அணியிடம் பேச்சு வார்த்தையை நடத்தியது.

கேகேஆர் விட்டுக்கொடுக்கும் வீரர்கள்: கேகேஆர் அணிக்கு நீண்ட காலமாக, சரியான கேப்டன் அமையவில்லை. இதனால், எப்படியாவது ஹர்திக் பாண்டியாவை வாங்கிவிட வேண்டும் என்ற குறிகோளுடன் இருக்கிறது. அதேநேரத்தில், மும்பை இந்தியன்ஸும், ஹர்திக்கை தள்ளிவிட்டு, மாற்றாக தரமான வீரரை வாங்க வேண்டிய கட்டாயத்திலும் இருக்கிறது.

இதனால், கேகேஆர் அணியிடம் டிரேடிங் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம், ஹர்ஷித் ராணா மற்றும் அங்கிரிஸ் ரகுவன்ஷி ஆகியோரை கேட்டிருக்கிறது. கேகேஆருக்கு ஹர்திக் பாண்டியா தேவை என்பதால், முதலில் கேகேஆர் அணி நிர்வாகம், இதற்கு கிரீன் சிக்னல் காட்டியிருக்கிறது. மேலும், அதன்பிறகு டிரேடிங் கட்டண பேச்சு வார்த்தையும் துவங்கியிருக்கிறார்கள்.

ஆனால், தற்போது கேகேஆர் அணி நிர்வாகம், பல்டி அடித்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஹர்ஷித் ராணாவையும், வருண் சக்ரவர்த்தியையும் கொடுக்கிறோம். அங்கிரிஸ் ரகுவன்ஷியை கொடுக்க முடியாது என மும்பை இந்தியன்ஸிடம் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்களாம். மேலும், டிரேடிங் கட்டணமும் 20 கோடிக்கு மேல் தர முடியாது என கூறியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

கேகேஆர் நிர்வாகம் அதிருப்தி? ஹர்திக் பாண்டியாவுக்கு தற்போது 32 வயதாகிறது. வரும் அக்டோபர் மாதம் வந்துவிட்டால், 33 வயதாகிவிடும். இதனால், ஹர்திக் பாண்டியாவை வாங்கினால், அடுத்த 2 வருடங்கள் வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பதால், அவசரப்பட்டு, திறமையான இளம் வீரர் அங்கிரிஸ் ரகுவன்ஷியை விட்டுக்கொடுக்க வேண்டாம் என சில கேகேஆர் அணி நிர்வாகிகள் தெரிவித்ததால்தான், மும்பை இந்தியன்ஸிடம் தற்போது கேகேஆர் அணி நிர்வாகம் கறார் காட்ட ஆரம்பித்துள்ளதாம்.

இதனால், மும்பை இந்தியன்ஸும் தற்போதைக்கு பேச்சு வார்த்தையை தள்ளி வைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் போன்ற அணிகளுடனும் பேச்சு வார்த்தையை நடத்தி, எந்த அணி சிறந்த வீரர்களை தர முன் வருகிறதோ, அந்த அணிக்கு ஹர்திக் பாண்டியாவை கொடுக்க முடிவு செய்துள்ளார்களாம்.

ஒருவேளை, மும்பை இந்தியன்ஸ் கேட்கும் வீரர்களை எந்த அணியும் தரவில்லை என்றால், ஹர்திக்கை மும்பை அணியிலேயே நீடிக்க வைக்கவும் அதிக வாய்ப்புள்ளது.

ஹர்திக் பாண்டியாவை தொடர்ந்து, சூர்யகுமார் யாதவையும் டிரேடிங்கில் அனுப்பதான் மும்பை இந்தியன்ஸ் முடிவு செய்துள்ளது. முதலில், ஹர்திக் டிரேடிங் டீலை முடித்துவிட்டு, அடுத்து சூர்யகுமார் யாதவ் டிரேடிங் டீலை ஆரம்பிக்க உள்ளனர்.

ஐபிஎல் 2027 சீசனின் பிளேயிங் 11-ல் பெரும்பாலும் இளம் வீரர்கள்தான் பிளேயிங் 11-ல் இருக்க வேண்டும் என மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு ஏற்ப, தற்போது இருந்தே திட்டங்கள் வகுத்து, டிரேடிங்கில் யார் யாரை வாங்க வேண்டும்? ஏலத்தில் எப்படி செயல்பட வேண்டும் என்பதை முடிவு செய்து வருகிறார்களாம். அடுத்த சீசனில் அதிரடி கம்பேக்கை கொடுப்பதுதான், மும்பை இந்தியன்ஸின் முதல் லட்சியமாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil