நகராட்சி நிர்வாக துறை நியமன முறைகேடு வழக்கு தொடர்பாக அமைச்சர் கே என் நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நகராட்சி நிர்வாக பணிநியமன முறைகேடு
தமிழ்நாடு டிஜிபி க்கு கடந்த சில தினங்களுக்கு முன் அமலாக்கத் துறை நகராட்சி நிர்வாகத்துறையின்பணி நியமனத்தில் லஞ்சம் பெற்றதாகவும்,ரூ 1,020 கோடி ரூபாய் டெண்டர் முறைக்கேடு நாடைபெற்றதாகவும் வழக்கு பதிவு செய்யக் கோரி கடிதம் அனுப்பி இருந்தது.இதனைத் தொடர்ந் து அமலாக்கத் துறை வழங்கிய கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய கோரி அதிமுக எம்.பி. இன்பதுரையும் ஆதிநாராயணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கே.என்.நேரு மீது வழக்கு பதிவு
இந்த வழக்கு,சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில்,வேறு ஒரு வழக்கில் சிக்கிய முக்கிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு டிஜிபி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து அமலாக்கத்துறை அனுப்பிய கடிதத்தினை அடிப்படையாக கொண்டு, லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை
இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, போதுமான ஆதாரங்களை அமலாக்கத்துறை சமர்ப்பித்துள்ளது. இதன் அடிப்படையில்,விசாரணையானது தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதில் ஆரம்ப கட்டவிசாரணை தேவையில்லை என்று என்று நீதிபதிகள் கூறினர்.மேலும் அமைச்சர் கே.என். நேரு மீது குற்றம் நிருபிக்கப்பட்டால் வழக்குப்பதிவு சட்டப்படி உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், பாஜக அரசு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுகிறது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களை நள்ளிரவில் கைது செய்து 100 நாட்கள் சிறையில் வைத்தும், மூன்று ஆண்டுகள் ஆகியும் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை.
அமலாக்கத்துறை விசாரணை
கடந்த 2016-ல் லாரிகளில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் வழக்கில் 10 ஆண்டுகள் ஆகியும் சிபிஐ இதுவரை முதல் தகவல் அறிக்கையைக் கூடப் பதிவு செய்யவில்லை. இவை அனைத்தும் தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் மற்றும் திமுகவின் இமேஜைக் கெடுப்பதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சிகள்.அமைச்சர் கே.என்.நேரு 41 தொகுதிகளுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.எஸ்.பாரதி கடும் விமர்சனம்
அவரது தேர்தல் பணியைப் பார்த்துப் பொறாமைப்பட்டு எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையின் பேரில் டெல்லியில் இருப்பவர்கள் பொய் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். அமைச்சர் இத்தகைய அச்சுறுத்தல்களுக்குப் பயப்பட மாட்டார்.தட்டத் தட்ட பந்து எழும்புவது போல இன்னும் தீவிரமாகப் பணியாற்றுவார். மேலும் எங்கள் மீது கடுமையாக வழக்குகள் எல்லாம் இதற்கு முன்பு போடப்பட்டது. அதனையும் தாண்டி வெற்றி பெற்றுள்ளோம் . அதே போல் இதனையும் வென்றுக் காட்டுவோம் என்று ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில், திமுகவிற்கும் மூத்த அமைச்சர் நேருவிற்கு இந்த வழக்கு கடும் நெருக்கடியாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

