தேர்தலில் விஜய்: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த சர்கார் படம் 2018ம் ஆண்டு ரிலீஸானபோது அதற்கு இரண்டு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அதிலும் குறிப்பாக தேசிய கட்சி எதிர்ப்பு தெரிவித்து சர்கார் படத்திற்கு இலவச விளம்பரம் கொடுத்ததாகவே அப்பொழுது பேசப்பட்டது. இதையடுத்து நாமும் சர்கார் மாதிரி காட்சிகள் வைத்தால் தேசிய கட்சியிடம் இருந்து இலவச விளம்பரம் கிடைக்கும் என்று சிலர் வெளிப்படையாகவே பேசினார்கள்.
அரசியல் கட்சி நடத்தி வரும் விஜய் வரும் 23ம் தேதி நடக்கும் சட்டசபை தேர்தலில் பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளின் தவெக வேட்பாளராக இருக்கிறார். இது அவரின் முதல் தேர்தல் தான் என்றாலும் தவெக தான் ஆட்சியை பிடிக்கும் என்று விஜய் ரசிகர்கள் நம்புகிறார்கள். அரசியல் அனுபவமே இல்லாத ஒருவர் எப்படி முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று முதல்வராக முடியும் என்று சமூக வலைதளங்களில் பெரும் விவாதமே நடந்து கொண்டிருக்கிறது.
நான் ஒழிப்பேன்: இந்நிலையில் சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நீங்கள் முதல்வரானால் மாநிலத்தில் மாற்றும் முதல் விஷயம் எது என்று விஜய்யிடம் பிரசன்னா கேட்டது குறித்து பேசப்படுகிறது. பிரசன்னா கேட்டதும், கற்பனையாக நான் முதல்வரானால் என்று கேட்கிறீர்கள் என சேஃபாக பதில் அளித்தார் விஜய்.
அது எல்லோரும் சொல்வது தான். லஞ்சம் ஊழலை ஒழிக்க என்னென்ன நடவடிக்கை எல்லாம் எடுக்க வேண்டுமோ அதை எல்லாம் எடுப்பேன் என்றார் விஜய். அது மட்டும் அல்ல அது தொடர்பாக ஒரு குட்டி கதையும் சொன்னார். இதை ஒழிப்பது எளிதானதாக எனக்கு தோன்றவில்லை. நமக்கு அது பழகிவிட்டது. அது ஒரு வைரஸ் மாதிரி பரவியிருக்கிறது.
உப்பு கதை: ஒரு மன்னர் தன் பரிவாரத்துடன் ஒரு ஊரை தாண்டி கடைத்தெருவுக்கு செல்கிறார். அவரிடம் வேலை செய்யும் சிப்பாய் எலுமிச்சம்பழச் சாறு செய்து அவரிடம் கொடுக்கிறார். மன்னர் அதை குடித்துவிட்டு இதில் உப்பு சேர்த்து கொடுங்கள் என்று கேட்கிறார். ஆனால் அவர்களிடம் உப்பு இல்லை. அதற்கு ஒருவரோ கடைத்தெருவுக்கு சென்று கொஞ்சம் உப்பு எடுத்துக் கொண்டு வா என்கிறார்.
அதை கேட்ட மன்னரோ, அப்படி எல்லாம் கடைத்தெருவில் உப்பு எடுக்கக் கூடாது, காசு கொடுத்து வாங்க வேண்டும். அதற்கு சிப்பாயோ, கொஞ்சமா உப்பு எடுக்கத் தானே சொன்னேன். இது ஒரு பெரிய விஷயமானு கேட்கிறார். நீ சொல்வது மாதிரி கொஞ்சம் உப்பு தான். அதற்கு நான் காசு கொடுக்காமல் இருந்தால் மன்னரே காசு கொடுக்காமல் உப்பு எடுத்தார் என்று என் பின்னால் வரும் பரிவாரம் ஊரையே கொள்ளையடித்துவிடும். அது தான் மன்னர்கள். நான் யாரையும் குறிப்பிட்டு இந்த கதையை சொல்லவில்லை. மாநிலத்தில் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் சரியாக இருந்தால் மற்றவர்களுக்கு ஒரு பயம் வரும் என்றார்.
விவாகரத்து, தநா 2026: விஜய் தேர்தலில் போட்டியிடும் இந்த நேரத்தில் அவரின் விவாகரத்து மற்றும் சொத்துமதிப்பு குறித்து அதிகம் விவாதிக்கப்படுகிறது. விஜய்க்கு ஒரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக மனைவி புகார் தெரிவித்த நிலையில் அவரால் எப்படி பிற பெண்களுக்கு நல்லது செய்ய முடியும் என்று கேட்கிறார்கள்.

