Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
நோபல் பரிசு கொடுக்கலாம்: திருமாவளவனை கிண்டலடித்த வைகோ - என்ன காரணம்?

நோபல் பரிசு கொடுக்கலாம்: திருமாவளவனை கிண்டலடித்த வைகோ - என்ன காரணம்?

Samayam Tamil 2 weeks ago

விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்றைய தினம் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியது.

தமிழக வெற்றி கழகத்தின் அமைச்சரவையில் இடம்பெற்று இருந்தாலும், திமுகவுடன் நட்பு தொடர்வதாக அவர் கூறியிருந்தார். திருமாவளவனின் இந்த கருத்து தவெக கூட்டணியில் சலசலப்பினை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவருடைய பேச்சு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

அதாவது விசிக தலைவர் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக மாறி மாறி பேசு வருவதாக அரசியல் வட்டாரத்தில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது. இதனிடையில் நேற்றைய தினம் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுக கூட்டணியில் நாங்கள் இருந்தோம். இப்போதும் திமுகவுடனான நட்பு தொடர்கிறது. விசிக தவெக கூட்டணியில் இல்லை. அதுக்குறித்து பரிசீலிப்போம் என கருத்து தெரிவித்து இருந்தார். அவருடைய இந்த பேச்சு தவெக கூட்டணியில் சலசலப்பினை ஏற்படுத்தியது.

இதனை தொடர்ந்து காங்கிரஸ் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர் வார்த்தைகளில் விளையாட வேண்டாம் என திருமாவளவனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அதாவது தவெக ஆட்சி அமைப்பதற்காக விசிக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு அளித்துள்ளன. அதோடு அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளன. இன்னமும் கூட்டணிக்கு பெயர் வைப்பது மட்டுமே மிச்சம் என தெரிவித்தார். எனவே வார்த்தைகளில் விளையாட வேண்டாம் என கருத்து கூறினார்.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திருமாவளவனின் பேச்சினை கிண்டல் அடித்துள்ளார். அதாவது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தவெக அமைச்சரவையில் விசிக பங்கேற்று இருந்தாலும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடன் கருத்து பங்கேற்பு தொடர்ந்து இருந்துக் கொண்டு இருந்தது என பேசியுள்ளார். இதுக்குறித்து என்ன உங்களுடைய கருத்து என்ன என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நோபல் பரிசு கொடுக்கப்பட வேண்டிய கருத்து என கிண்டலாக பதிலளித்தார்.

திருமாவளவனை கிண்டலடித்து வைகோ பேசியுள்ளது தற்போது கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் கூட்டணியில் இருந்துக் கொண்டே தவெகவை விமர்சனம் செய்வது ஏன் எனவும் வைகோ நேற்றைய தினம் கூட்டம் ஒன்றில் பேசினார். அதாவது, தவெக கூட்டணியில் தற்போது இருக்கிறேன். ஏதாவது தவறு நடந்தால் நெறியாக அமைச்சருக்கு போன் பண்ணியே சொல்வேன். ஏன் முதல்வருக்கே போன் பண்ணி சொல்வேன்.

ரோட்டில் வந்து விமர்சனம் செய்ய மாட்டேன். தற்போது தவெக கூட்டணியில் இருக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு ஒன்றை சொல்லி கொள்கிறேன். குறை சொல்ல வேண்டும் என்றால் நேரடியாக அமைச்சர்களிடம் வந்து சொல்லுங்கள். கூட்டணியில் இருந்து கொண்டே தினமும் ஒரு பேட்டி கொடுப்பது ஏன்? ஆட்சியை ஆதரிக்கிறேன் என சொல்லி விட்டு, அவுங்க மேலே குறை சொல்வதா? என கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் தற்போது திருமாவளவனின் பேச்சு குறித்து வைகோ தெரிவித்துள்ள கருத்துக்கள் கவனம் ஈர்த்து கொண்டிருக்கிறது. இதற்கிடையில் தேர்தல் முடிவுகளுக்கு பின்பாக திமுகவுடன் இருந்த நட்பு குறித்து தான் திருமாவளவன் பேசினார். கடந்த காலத்தில் நடந்தவை பற்றி மட்டுமே அவர் பேசினார். அவருடைய பேச்சு திரித்து அவதூறு பரப்பப்படுகிறது என திருமாவளவன் பேச்சு குறித்து விசிக சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil