உங்களுடைய ரேஷன் அட்டையில் திருமணம் ஆன குடும்ப உறுப்பினர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை உடனே நீக்க வேண்டும்.

பொருளாதாரத்தில் நலிந்த குடும்பங்களுக்கு மலிவு விலையில் உணவு தானியங்களை வழங்குவதற்காக மத்திய அரசு ரேஷன் அட்டைகளை வழங்குகிறது. ரேஷன் அட்டைகளில் அனைத்து குடும்ப உறுப்பினர்களின் பெயர்களும் இடம்பெற்றிருக்கும். ரேஷன் அட்டை மூலம் பெறப்படும் உணவு தானியங்களின் அளவு குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தது.
அப்டேட் முக்கியம்!

திருமணம் அல்லது குடும்ப உறுப்பினர் இறப்பு போன்ற காரணங்களுக்காக, சரியான நபருக்குப் பலன்கள் கிடைப்பதை உறுதிசெய்ய ரேஷன் அட்டையைப் புதுப்பித்து வைத்திருப்பது மிகவும் முக்கியம். இல்லாவிட்டால் ரேஷன் உதவிகள் கிடைப்பதில் சிரமம் ஏற்படும்.
ஏன் அப்டேட் செய்ய வேண்டும்?

குடும்பங்களில் காலப்போக்கில் நிறைய மாற்றங்கள் வருகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் திருமணம் போன்ற காரணங்களால் பிரிந்து செல்வதும், இறப்பு காரணமாக பெயரை நீக்க வேண்டியதும் இருக்கும். எனவே ரேஷன் அட்டையைப் புதுப்பித்து வைத்திருப்பது அவசியம். வேறு யாராவது அதைத் தவறாகப் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்பைத் தவிர்க்க, பெயர்களை நீக்குவது அவசியமாகும்.
பெயரை நீக்குவது கட்டாயம்!

ஒரு மகளுக்குத் திருமணம் ஆகி, அவர் மாமியார் வீட்டிற்குச் சென்றால், பெற்றோரின் ரேஷன் அட்டையிலிருந்து அவரது பெயரை நீக்க வேண்டும். அதேபோல, ஒரு குடும்ப உறுப்பினர் இறந்த பிறகு, அவரது பெயரைப் ரேஷன் பட்டியலிலிருந்து நீக்குவது சட்டப்படி கட்டாயமாகும்.
ஆன்லைனில் அப்டேட்!

முதலில், உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்ல வேண்டும். அதில் உள்நுழைந்த பிறகு Change/Remove Name என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நீங்கள் நீக்க விரும்பும் உறுப்பினரின் பெயரைத் தேர்ந்தெடுத்து, நீக்குவதற்கான சரியான காரணத்தை வழங்க வேண்டும். இறப்புச் சான்றிதழ் அல்லது திருமண பத்திரிகை போன்ற தேவையான ஆவணங்களைப் பதிவேற்றம் செய்து படிவத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆஃப்லைன் செயல்முறை!

அருகிலுள்ள ரேஷன் அலுவலகத்திற்குச் சென்று விண்ணப்பப் படிவத்தை நிரப்பலாம். தேவையான ஆவணங்களுடன் படிவத்தைச் சமர்ப்பித்த பிறகு, அதிகாரிகள் உங்கள் பதிவுகளை மதிப்பாய்வு செய்து உங்கள் பெயரை நீக்குவார்கள்.
அப்டேட் செய்யாவிட்டால்..!

ரேஷன் அட்டையில் உங்கள் பெயர் புதுப்பிக்கப்படாவிட்டால் வேறு யாராவது உங்கள் பெயரில் சட்டவிரோதமாக ரேஷன் உதவிகளைப் பெற வாய்ப்பு உள்ளது. அரசுத் திட்டங்களின் முழுப் பலனையும் பெற, உங்கள் தகவல்களைத் தவறாமல் ரேஷன் அட்டையில் புதுப்பிக்க வேண்டும்.

