Dailyhunt
சம்மரில் காய்கறிகள் சீக்கிரம் அழுகுதா? பிரிட்ஜில் வைக்காமலே பிரஷ்ஷாக வைத்திருக்க சில வழிகள்!

சம்மரில் காய்கறிகள் சீக்கிரம் அழுகுதா? பிரிட்ஜில் வைக்காமலே பிரஷ்ஷாக வைத்திருக்க சில வழிகள்!

Samayam Tamil 1 week ago

ம்மரில் காய்கறிகளை சேமிப்பது மிகவும் சவாலான காரியமாகும். குறிப்பாக பிரிட்ஜ் இல்லையென்றால் அல்லது வேலை செய்யாமல் இருந்தால், காய்கறிகள் விரைவாக வாடி அழுகிவிடும்.

ஆனால் சில எளிய மற்றும் பயனுள்ள டிரிக்ஸ்களை பயன்படுத்தினால், காய்கறிகளை நீண்ட நேரம் பிரெஷ்ஷாக வைத்திருக்க முடியும்.


கோடை காலத்தில் காய்கறிகள் அழுகிப்போவது பலரும் சந்திக்கும் பிரச்சனையாகும். இதற்கு வெப்பம் மற்றும் ஈரப்பதம் முக்கிய காரணமாகும். ஒவ்வொரு முறையும் கடைக்கு சென்று வாங்க முடியாததால் மொத்தமாக வாங்கி வைக்கும்போது சீக்கிரமாக வீணாகிவிடுகிறது.

​Research Gate-ல் வெளியான ஆய்வின்படி, வெப்பநிலை - ஈரப்பதம் - காற்றோட்டம் ஆகிய மூன்றையும் சரியாக பராமரித்தால், பிரிட்ஜ் இல்லாமலேயே காய்கறிகளின் ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்க வீட்டு கிச்சனிலே காய்கறிகளை பத்திரமாக சேமிக்கும் 5 சூப்பரான வழிகளை இங்கு பார்க்கலாம்மண்பானை சேமிக்கும் முறை

இது ஒரு பழமையான எளியத் தொழில்நுட்பமாகும். ஒரு பெரிய மண்பானைக்குள் ஒரு சிறிய மண்பானையை வைக்க வேண்டும். இரண்டுக்கும் நடுவில் உள்ள இடைவெளியில் ஈரமான மணலை நிரப்ப வேண்டும். மணலில் உள்ள நீர் ஆவியாகும்போது, உள் பானையில் உள்ள வெப்பநிலையை குறைத்து காய்கறிகளை நீண்ட நாட்கள் கெடாமல் பாதுகாக்கும்.

MIT D-Lab வெளியிட்ட தகவலின்படி, இந்த பானை முறையைப் பயன்படுத்தும்போது காய்கறிகளின் ஆயுட்காலம் 2 நாட்களில் இருந்து 20 நாட்கள் வரை அதிகரிப்பதாக குறிப்பிடப்பட்ட்டுள்ளது. வெப்பமான இடங்களில் இம்முறையை பின்பற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


காற்றோட்டமான இடத்தில் சேமித்தல்

காய்கறிகளை பிரெஷ்ஷாகவும், புத்துணர்ச்சியாகவும் வைத்திருக்க காற்றோட்டம் மிகவும் முக்கியமாகும். உங்க வீட்டில் குளிர்ச்சியான மற்றும் நல்ல காற்றோட்டமான இடத்தில் காய்கறிகளை சேமிக்க வேண்டும். நேரடி சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கக்கூடாது.

அதேபோல், பிளாஸ்டிக் பையில் சேமித்து வைக்கக்கூடாது. அதற்கு பதிலாக, மூங்கில் கூடை அல்லது மெஷ் பேக்கில் சேமிக்க வேண்டும்.


காட்டன் துணி (அ) பேப்பர் டவலில் சுற்றுதல்

கீரை, கொத்தமல்லி அல்லது வெந்தயக்கீரை போன்ற இலை வகை காய்கறிகள் கோடை வெப்பத்தில் மிக விரைவில் வாடிவிடும்.

இவற்றை ஒரு காட்டன் துணி அல்லது பேப்பர் டவலில் சுற்றி வைக்க வேண்டும். இது ஈரப்பதம் ஆவியாகாமல் தடுத்து, காய்கறிகளை நீண்ட நாட்கள் பிரெஷ்ஷாக வைக்கும்


எத்திலீன் வாயு

எத்திலீன் வாயுவை வெளியிடும் மாம்பழம், வாழைப்பழம் போன்ற பழங்கள் அருகே காய்கறிகள் சேமிப்பதை தவிர்க்க வேண்டும். அவை காய்கறிகள் முன்கூட்டியே அழுக காரணமாகலாம். இந்த பழங்களை ஒருபோதும் காய்கறிகள் அருகே வைக்கக்கூடாது.

Journal of Agricultural and Food Chemistry வெளியிட்ட தகவலின்படி, எத்திலீன் வாயு பழங்கள் மற்றும் காய்கறிகள் சீக்கிரமாக பழுக்கும் பிராசஸை தூண்டுவதற்காக குறிப்பிடப்பட்டுள்ளது.


காய்கறிகளை கழுவக்கூடாது

பலர் காய்கறிகளை வாங்கிய உடனேயே கழுவி வைப்பார்கள். ஆனால், காய்கறிகளின் மேற்புறத்தில் தங்கும் அதிகப்படியான ஈரப்பதம் பூஞ்சை மற்றும் பாக்டீரியா வளர்ச்சியைத் தூண்ட வாய்ப்புள்ளது.

சமைப்பதற்கு முன்பு மட்டும் காய்கறிகளை கழுவுங்கள். வாங்கியபோது அழுக்கு தென்பட்டால் துணியால் துடைத்துவிட்டு சேமிக்கவும்.

இனி காய்கறிகளை சேமிக்க வீட்டில் பிரிட்ஜ் இல்லையென்றால் கவலைப்படாதீங்க.. காய்கறிகளை மொத்தமாக வாங்கினாலும் இப்படி சேமித்தால் நீண்ட நாட்கள் பிரெஷ்ஷாக வைத்திருக்க முடியும்.


Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil