Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
தவெக கூட்டணியில் விசிக இணைந்துவிட்டதா? செய்தியாளர் கேள்விக்கு திருமா ஓபன் பதில்?

தவெக கூட்டணியில் விசிக இணைந்துவிட்டதா? செய்தியாளர் கேள்விக்கு திருமா ஓபன் பதில்?

Samayam Tamil 2 weeks ago

திவான் பகதூர் திராவிட மணி இரட்டைமலை சீனிவாசனின் 167 ஆவது பிறந்தநாளை ஒட்டி சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள இரட்டை மலை சீனிவாசன் மணிமண்டபத்தின் வெளியே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள இரட்டை மலை சீனிவாசன் திருவுருவப்படத்திற்கு தமிழக அரசு சார்பாக அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா, வன்னியரசு, வெங்கடரமணன், மரியன் வில்சன், குமார் உள்ளிட்டோர் உடன் விசிக தலைவர் தொல்.

திருமாவளவன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

உடன் விசிக முதன்மை செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் மற்றும் விசிக பொருளாளர் எஸ். எஸ். பாலாஜி உள்ளிட்டோர் இருந்தனர்.

திருமாவளவன் செய்தியாளர் சந்திப்பு

அதனை தொடர்ந்து அமைச்சர்கள் யாரும் செய்தியாளர்களை சந்திக்கவில்லை பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில்

திராவிட இயகத்தின் முன்னோடி

அவர்கள் எனவும் தமிழக அரசியலில் ஏன் அகில இந்திய அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் எனவும் கூறினார். மேலும் அவர் காந்தியடிகள் உடன் நெருங்கி பழகியவர், அம்பேத்கர் உடனும் பணியாற்றியவர் எனவும் சாதி ஒழிப்பில் அம்பேத்கருக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் எனவும் அவர் பேசியிருந்தார்.

மேலும், "ஒடுக்கப்பட்ட மக்களை ஓர் அணியில் இணைக்க அவர் எடுத்த முயற்சி அதை போல் அம்பேத்கர் உடன் இணைந்த பின் அவரை தனது தலைவராக ஏற்று கொண்ட பண்பு என அவரது நினைவுகள் நிறைய உள்ளது.

திராவிட வரலாற்றிகளில் அயோத்தி பண்டிததாசர் மற்றும் இரட்டை மலை சீனிவாசன் பெயர்கள் எப்போதும் நிலைத்து நிற்கும்" என தெரிவித்தார்

அமைச்சர் கீர்த்தனா விவகாரம்

அமைச்சர் கீர்த்தனா விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர், அதுகுறித்து அமைச்சர் கீர்த்தனாவிடம் கேட்டால்தான் சரியாக இருக்கும் என பதில் அளித்தார். (அமைச்சர் கீர்த்தான காணொளி குறித்தான கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பிய போது அது பற்றி தனக்கு தெரியது என திருமாவளவன் கூறினார். உடனே அருகே இருந்தவர்கள் அவருக்கு எடுத்து கூற இவ்வாறக பதில் அளித்ததாக சொல்லப்படுகிறது.

ரீல்ஸ் போடுவது தவறு கிடையாது

அரசின் செயல்பாடுகளை அதிமாக சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்வது சர்ச்சையாகி வருகிறது ஏன் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், இன்றயை காலக்கட்டத்தில் ஒவ்வொரு செயல்களையும் சமூக வலைதளத்தில் பதிவு செய்வது தவறு கிடையாது.

பொது ஒழுங்கிற்கு தீங்கு ஏற்படாத வரையில் பிரச்சனைஇல்லை அப்படி இருந்தால் அதிகாரிகள் அமைச்சர்கள் அதனை மாற்றி கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

திமுக கூட்டணியில் இருந்து விசிக வெளியேறியது என திமுக தலைவர் கூறியதாக விசிக விருது வழங்கும் விழாவில் பேசி இருந்தீர்கள் அது குறித்தான கேள்விக்கு,

தவெக கூட்டணியில் விசிக

ஆட்சி அமைக்க இரண்டு இடங்கள் பற்றாக்குறை உள்ளது அது குறித்து விஜய் இடம் இருந்து கடிதம் வந்தது. அப்போது விசிக வெளியில் இருந்து தான் ஆதரவு என தெரிவித்தோம் அதற்கு பிறகு 10 நாட்கள் கழித்து தான் அமைச்சரவையில் இடம் பெற்றோம்.


தற்போது வரை தவெக கூட்டணியில் விசிக இணைய அதிகாரப்பூர்வமாக எந்த நிகழ்வும் நடைபெற வில்லை எனவும் தவெக கூட்டணி தொடர்பாக ஆதரவு கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தை ஜூலை 1 ஆம் தேதி முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்றது.

ஆனால் அந்த கூட்டத்தில் தவெக கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை அதனால் தவெக தலைமையில் ஒரு கூட்டணி அமையவில்லை என தெரிவித்தார்.

மேலும் விசிக அமைச்சரவையில் இடம் பெற்றதும் திமுகவிற்கு துரோகம் செய்து விட்டோம் என கருத்து சொன்னார்கள். தவெக உடன் செல்வதற்கு அண்ணன் ஸ்டாலினிடம் கருத்து கேட்டோம்,

அந்த உறவும் அந்த நட்பும் இன்னும் தொடர்கிறது அந்த நிலையில் தான் விசிகவில் இருந்து அதிருப்தியில் இருந்த பொறுப்பாளர் ஒருவர் திமுகவில் இணைந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது அந்த ஆதங்கத்தில் நான் விருது வழங்கும் விழாவில் பேசினேன் என கூறினார்.

ஆணவப்படுகொலை தனிச்சட்டம் தொடர்பாக பேசுகையில், ஆவணப்படுகொலை தனி சட்டம் இயற்றுவது தொடர்ந்து கடந்த கால ஆட்சியில் இருந்து தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம் இப்போதும் வலியுத்துவோம் என தெரிவித்தார்

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil