Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
திருவள்ளுவர் சர்ச்சை தீவிரம்: வைகோவுக்கு எதிராக இந்து பரிவார் ஆர்ப்பாட்டம்

திருவள்ளுவர் சர்ச்சை தீவிரம்: வைகோவுக்கு எதிராக இந்து பரிவார் ஆர்ப்பாட்டம்

Samayam Tamil 1 week ago

திமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக குற்றம்சாட்டி, சென்னை சிவானந்தா சாலையில் தமிழக இந்து பரிவார் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் வைகோவுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பியதுடன், அவரது கருத்துக்களுக்கு கடும் எதிர்ப்பையும் பதிவு செய்தனர்.

அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தலையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து போலீஸ் வாகனங்களில் ஏற்றி அழைத்துச் சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

முற்றுகை திட்டம் மாற்றப்பட்டதா?

போராட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக இந்து பரிவார் அமைப்பின் தலைவர் வசந்தகுமார், முதலில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடத் திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தார். ஆனால் காவல்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர், அந்த திட்டம் கைவிடப்பட்டு சென்னை சிவானந்தா சாலையில் கண்டன ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டதாக கூறினார்.

திருவள்ளுவர் குறித்து இந்து பரிவார் அமைப்பின் கருத்து

திருவள்ளுவர் திருக்குறளை தமிழில் இயற்றியவர் மட்டுமல்ல, தங்களைப் பொறுத்தவரை ஒரு சித்தர் என்றும் வசந்தகுமார் தெரிவித்தார். எனவே திருவள்ளுவருக்கு விபூதி அணிவிப்பது, பட்டை இடுவது, காவி உடை அணிவிப்பது உள்ளிட்டவை தங்களது உரிமை என்றும் அவர் கூறினார்.

இந்த உரிமையை வைகோவோ அல்லது எந்த திராவிடக் கட்சிகளோ மறுக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார். திருவள்ளுவரை எந்த அடையாளத்தில் மக்கள் பார்க்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

சட்டமன்றத்தில் காவி உடையுடன் திருவள்ளுவர் சிலை கோரிக்கை

தமிழக சட்டமன்றத்தில் காவி உடை அணிந்த திருவள்ளுவர் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்று தமிழக இந்து பரிவார் அமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அரசுக்கு அதிகாரப்பூர்வமாக கோரிக்கை வைக்கப்படும் என்றும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மீண்டும் போராட்ட எச்சரிக்கை

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட முயன்ற வைகோவின் செயலுக்கும் இந்து பரிவார் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. எதிர்காலத்திலும் இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால், அனைத்து இந்து அமைப்புகளையும் ஒன்றிணைத்து மாநிலம் தழுவிய மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கப்படும் என வசந்தகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil