Dailyhunt
வங்கி டெபாசிட் தொகை.. பொதுத் துறை வங்கிகளை மிஞ்சிய தனியார் வங்கிகள்!

வங்கி டெபாசிட் தொகை.. பொதுத் துறை வங்கிகளை மிஞ்சிய தனியார் வங்கிகள்!

Samayam Tamil 6 days ago

டன் வழங்கும் விஷயத்தில் பொதுத்துறை வங்கிகளை விட தனியார் துறை வங்கிகள் வைப்புத்தொகையில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

இருப்பினும், ஒட்டுமொத்தமாக வைப்புத்தொகையைத் திரட்டுவதில் வங்கிகள் தொடர்ந்து சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. தற்காலிக வங்கித் தரவுகளை ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, 2025-26 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் தனியார் துறை வங்கிகள் வைப்புத்தொகையில் 12 முதல் 17 சதவீதம் வரை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

அதே நேரத்தில் பொதுத்துறை வங்கிகள் 2 முதல் 14 சதவீதம் வரை இந்த வளர்ச்சியைக் கண்டுள்ளன. குறைந்த செலவிலான வைப்புத்தொகைகள் மீதான தொடர்ச்சியான அழுத்தம் காரணமாக, வங்கிகள் சமீபத்திய காலாண்டுகளில் வைப்புச் சான்றிதழ்கள் மூலம் நிதி திரட்டுவதையே அதிகம் சார்ந்துள்ளன என்பது தெரியவந்துள்ளது. வைப்புத்தொகையைத் திரட்டுவது, குறிப்பாக நடப்புக் கணக்குகள் மற்றும் சேமிப்புக் கணக்குகளுக்கு சவாலாகவே உள்ளது. ஏனெனில், ஒப்பீட்டளவில் குறைந்த வட்டி விகிதங்கள் மற்ற நிதித் தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது இந்த வைப்புத்தொகைகளைக் கவர்ச்சியற்றதாக ஆக்கியுள்ளன.

தனியார் துறை வங்கிகளில், IDFC ஃபர்ஸ்ட் வங்கி FY26 நிதியாண்டின் நான்காவது காலாண்டில் மிக உயர்ந்த வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. வங்கியின் வைப்புத்தொகை 17.2 சதவீதம் அதிகரித்து ரூ. 2.84 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. கோடக் மஹிந்திரா வங்கி மற்றும் HDFC வங்கி முறையே 14.7 சதவீதம் மற்றும் 14.4 சதவீத வளர்ச்சியுடன் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடங்களைப் பிடித்துள்ளன.

உள்நாட்டுத் தரகு நிறுவனமான மோதிலால் ஓஸ்வால் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், HDFC வங்கியின் வைப்புத்தொகை வளர்ச்சி FY28 நிதியாண்டு வரையில் 14 சதவீதமாக இருக்கும் என்றும், அந்தக் காலகட்டத்தில் கடன்-வைப்பு விகிதம் 94 சதவீதமாகக் குறைய வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளது. பொதுத்துறை வங்கிகளில், பேங்க் ஆஃப் இந்தியா வங்கி ஜனவரி-மார்ச் காலாண்டில் 14.33 சதவீத வைப்புத்தொகை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

அதைத் தொடர்ந்து பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி 14 சதவீத வளர்ச்சியையும், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி 13.37 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன. மார்ச் காலாண்டு முடிவடைந்த பிறகு பெரும்பாலான வங்கிகள் தற்காலிக செயல்திறன் புள்ளி வரங்களைப் பகிர்ந்துள்ளன. இருப்பினும், இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா போன்ற சில வங்கிகள் இந்தப் புள்ளி விவரங்களை வழங்கவில்லை.

கடன் வழங்குவதில் தனியார் வங்கிகள் முன்னிலை!

கடன் வளர்ச்சியைப் பொறுத்தவரையில், பொதுத்துறை வங்கிகள் தனியார் வங்கிகளை விட சிறப்பாகச் செயல்பட்டுள்ளன. பொதுத்துறை வங்கிகள் 12 முதல் 22 சதவீதம் வரை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில் தனியார் துறை வங்கிகள் 12 முதல் 20 சதவீதம் வரை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன. பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி ரூ. 2.92 லட்சம் கோடி கடன்களை வழங்கியுள்ளது. இது ஆண்டுக்கு ஆண்டு 22 சதவீத வளர்ச்சியாகும். மேலும், யூகோ வங்கி 20 சதவீத வளர்ச்சியுடன் ரூ. 2.34 லட்சம் கோடி கடன்களை வழங்கியுள்ளது.

அடுத்து, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 18.90 சதவீத வளர்ச்சியுடன் ரூ. 3.45 லட்சம் கோடியும் கடனாக வழங்கியுள்ளது. மோதிலால் ஓஸ்வால் அறிக்கையின்படி, 2026 மார்ச் 15 நிலவரப்படி கடன் வளர்ச்சி 13.8 சதவீதமாக இருந்ததுடன், ஜிஎஸ்டி குறைப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட போதுமான பணப்புழக்கம் மற்றும் நுகர்வு சார்ந்த மீட்சி காரணமாக இந்த வளர்ச்சி வலுவாகத் தொடர்கிறது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil