Dailyhunt
வீட்டில் இருந்தே திருச்செந்தூர் முருகனின் அருளை பெற எளிய வழி

வீட்டில் இருந்தே திருச்செந்தூர் முருகனின் அருளை பெற எளிய வழி

Samayam Tamil 6 months ago

ந்த சஷ்டி விரதம் துவங்கி, இரண்டாவது நாளில் இருக்கிறோம். இந்த சமயத்தில் பலரும் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளுக்கும் சென்று தங்கி இருந்து, சஷ்டி விரதம் இருந்து வருகிறார்கள்.

இது தவிர பல முருகன் கோவில்களிலும் சென்று, சஷ்டி விரதம் இருப்பார்கள். கந்த சஷ்டி என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வரும் முருகப் பெருமானின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் தலத்திற்கு சென்று தங்கி இருந்து, சஷ்டி விரதம் இருப்பதை பலரும் வழக்கமாக வைத்துள்ளார்கள். இருந்தாலும் பலருக்கும் திருச்செந்தூர் சென்று ஒரு வாரம் தங்கி இருந்து, விரதம் இருப்பது முடியாத காரியமாக இருக்கும்.

சிலருக்கு திருச்செந்தூர் சென்று முருகனை தரிசிக்கவும், வழிபடவும் வசதி இல்லாமல் இருக்கலாம். இன்னும் சிலர் சூழ்நிலை காரணமாக திருச்செந்தூர் செல்ல முடியாமல் இருப்பார்கள். இப்படி முருகன் மீது பக்தி கொண்டவர்கள், திருச்செந்தூர் செல்ல முடியவில்லை என்றாலும் அவரது அருளை பெறுவதற்கு எளிமையான வழிகள் உள்ளன. திருச்செந்தூர் முருகப் பெருமானுக்குரிய மூல மந்திரங்கள்சில உள்ளன. இவற்றை கந்த சஷ்டி விரதம் இருக்கும் காலத்திலும், மற்ற நாட்களிலும் முருகப் பெருமானை மனதார நினைத்து சொல்லி வந்தால் திருச்செந்தூர் முருகப் பெருமானின் அருள் அனைவருக்கும் கிடைக்கும்.

திருச்செந்தூர் முருகன் மூலமந்திரம் :

  • ஸ்கந்தர் மூலமந்திரம்: " ஓம் ஸ்ரூம் ஸ்கந்தாய நம: "
  • சுப்பிரமணியர் மூலமந்திரம்: " ஓம் ஸௌம் ஸுப்ரமணியாய நம: "
  • குமாரர் மூலமந்திரம்: " ஓம் க்ரூம் குமாராய நம: "
  • குஹர் மூலமந்திரம்: " ஓம் ஸூம் ஸ்வாமி குஹாய நம: "
  • சரவணபவர் மூலமந்திரம்: " ஓம் ஸ்ரீம் சம் சரவணபவாய நம: "
  • ஷண்முகர் மூலமந்திரம்: " ஓம் ஹ்ரீம் ஷம் ஷண்முகாய நம: "
  • வள்ளிதேவி பீஜம்: " ஓம் வ்ரீம் மகாவல்யை நம: "
  • தேவசேனா பீஜம்: " ஓம் ஹ்ரீம் தேவசேனாயை நம: "
  • "ஓம் சுப்ரமண்யாய நமஹ
  • ஓம் சரவணபவ"
  • இந்த அனைத்து மந்திரங்களையுமோ அல்லது உங்கள் மனதிற்கு நெருக்கமான ஏதாவது ஒரு மந்திரத்தை மட்டுமோ கந்த சஷ்டி காலத்தில் தொடர்ந்து சொல்லுவது சிறப்பானதாகும். வீட்டில் விளக்கேற்றி வைத்து, திருச்செந்தூர் ஆண்டவரை மனதார நினைத்து இந்த மந்திரத்தை சொன்னால் முருகனின் அருள் கிடைக்கும். உங்களின் பக்தி உண்மையான, திடமானதாக இருந்தால் ஏதாவது ஒரு வடிவில் முருகப் பெருமானின் காட்சியும் உங்களுக்கு கிடைக்கும். இந்த மந்திரங்களை கந்தசஷ்டி காலத்தில் மட்டுமின்றி எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். எப்போது சொன்னாலும், எத்தனை முறை சொன்னாலும் இந்த மந்திரங்கள் நிச்சயம் பலன் தரக் கூடியவை ஆகும்.
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil