Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
வில்லிவாக்கம் முதல் திருப்பரங்குன்றம் வரை. 26 தொகுதிகளில் இழுபறி - வெல்லப்போவது யார்?

வில்லிவாக்கம் முதல் திருப்பரங்குன்றம் வரை. 26 தொகுதிகளில் இழுபறி - வெல்லப்போவது யார்?

Samayam Tamil 3 months ago

மிழக சட்டமன்ற தேர்தலுக்கு வெகு சொற்ப நாட்களே இருக்கிறது. தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் அமரப்போகிற அடுத்த ஆட்சியாளரின் யார் என்ற கேள்வி அனைவரும் மனதிலும் எழத் தொடங்கி இருக்கிறது.

நான்கு முனை போட்டி என்பதால் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் என சொல்லப்பட்டாலும் விஜய் அம்சம் அதிகளவிலான நாம் தமிழர் வாக்குகளை சிதைக்கிறது. முறையே சிறுபான்மையினர், கிறிஸ்தவ வாக்குகளையும் விஜய் கணிசமான அளவில் பெறுவார் என சொல்லப்படுகிறது.

இதனால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை உறுதியாக சொல்ல முடியவில்லை. இந்த சூழலில் தான் வெற்றி தோல்வி யாருக்கு என ஒரு மெகா சர்வேவை தமிழ் வார இதழ் ஒன்று வெளியிட்டிருக்கிறது. அந்த கருத்துக்கணிப்பின்படி திமுக 36% வாக்குகளையும், அதிமுக 33% வாக்குகளையும், தவெக 24% வாக்குகளையும் நாதக 3% வாக்குகளையும் பெறுவர் என சொல்லப்படுகிறது. தமிழகத்தில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளில் 26 தொகுதிகளில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பதும் கணிக்க முடியாமல் இருக்கிறது.

இழுபறியில் இருக்கக்கூடிய தொகுதிகள்!

வில்லிவாக்கம், செய்யூர், சோளிங்கர், ஆம்பூர், பாப்பிரெட்டிபட்டி, பரமத்தி, வேலூர், திருச்செங்கோடு, பெருந்துறை, காங்கேயம், குன்னூர், திண்டுக்கல், கிருஷ்ணராயபுரம், துறையூர், மயிலாடுதுறை, கும்பகோணம், பேராவூரணி, திருமயம், மதுரை தெற்கு, திருப்பரங்குன்றம், ஆண்டிப்பட்டி, சாத்தூர், சிவகாசி,வாசுதேவநல்லூர், நாகர்கோவில்

ஏன் இழுபறி?

தேர்தல் களத்தில் காணாமல் போனது, கடந்த காலங்களில் மக்களிடம் அதிருப்தி அலைகளை பெற்றது, மக்களை சந்திக்காதது, முகம் பரிச்சயம் இல்லாமல் போனது, விஜய் Factor உள்ளிட்ட பல காரணங்களால் இந்த 26 தொகுதிகளிலும் இழுபறி நீடிப்பதாக சொல்லப்படுகிறது. இந்த 26 தொகுதிகளில் குறிப்பிட்ட சர்ச்சைக்குரிய தொகுதிகளின் கள நிலவரங்கள் கவனம் ஈர்த்துள்ளது.

வில்லிவாக்கம்

வில்லிவாக்கம் தொகுதியில் தவெக சார்பில் ஆதவ் அர்ஜுனா, திமுக சார்பில் கார்த்திக் மோகன் களம் காண்கின்றனர். இருவரும் பெரும் படை பலத்தோடும் பண பலத்தோடும் தொகுதியில் சுற்றி வருவதாக சொல்லப்பட்டு வருகிறது. திமுக vs தவெக இடையே போட்டி வலுப்பதால், அதிமுக போட்டி களத்தில் இல்லாமல் போயிருக்கிறது. எனவே வில்லிவாக்கம் தொகுதியில் யார் வெற்றி பெறுவார் என்பது கணிக்க முடியாததாக மாறியிருக்கிறது ‌.


திண்டுக்கல்

திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி மகன் ஐ.பி செந்தில்குமார் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். திண்டுக்கல் சீனிவாசன் தொகுதிக்குள் செல்வாக்கு மிக்கவராக இருந்தாலும் எதோ ஒரு வெற்றி கணக்கோடுதான் ஐ.பி செந்தில் குமாரை பழனி தொகுதியில் இருந்து திண்டுக்கல் தொகுதிக்கு மாற்றி இருக்கிறது திமுக. நாதக, தவெக குறிப்பிட்ட வாக்குகளை எடுத்துக்கொண்டு சென்றாலும் சீனிவாசன், ஐடி செந்தில் குமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆனால் திண்டுக்கல் தொகுதியில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு ஓரளவுக்கு அதிகரித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.

கும்பகோணம்

கும்பகோணம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் அன்பழகன் தொடர்ந்து மூன்று முறை எம்எல்ஏவாக அந்த தொகுதியில் இருந்தார். மேலும் அவர் மீது எந்த அதிருப்தியும் இல்லாதது அதிமுகவிற்கு அழுத்தமாக பார்க்கப்படுகிறது. மேலும் அதிமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் களம் இறங்கும் அசோக் குமார் ஆதரவாக அதிமுக,பாஜக தமிழ் மாநில காங்கிரஸ் என கூட்டணி கட்சியினர் பக்கபலமாக இருப்பதால் இருவரும் சம பலத்தில் போட்டியிடுவதால் கும்பகோணத்தில் இழுபறி.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் திமுக சார்பில் கிருத்திகா பாண்டியன், அதிமுக சார்பில் வி.வி ராஜன் செல்லப்பா, நாதக சார்பில் சத்யா தேவி, தவெக சார்பில் சி.டி.ஆர் நிர்மல் குமார் போட்டியிடுகிறார்கள்.திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் திமுக இந்து மக்களுக்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டது.


இந்த சூழலில் கிருத்திகா தங்க பாண்டியனின் தீவிர பிரச்சாரம் சி.டி.ஆர் நிர்மல் குமார் பெறும் சொந்த சமூக வாக்குகள், வி வி ராஜன் செல்லப்பாவின் அரசியல் வியூகம் இதன் காரணமாக நான்கு முனை போட்டி வலுத்து வருவதால் திருப்பரங்குன்றம் தொகுதியில் இழுபறி நீடித்து வருகிறது.

சாத்தூர்

திமுகவில் கடற்கரை ராஜ், பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சியில் ஆனந்த்ராஜா தவெக -வில் அஜித் ஆகியோர் போட்டியிடுகின்றனர். திமுகவிற்கு கிடைக்க போகும் நாயக்கர் சமூக வாக்குகள் மற்றும் கூட்டணி கட்சிகளால் திமுக சாத்தூர் தொகுதியில் பலம் பெறுகிறது.

முக்குலத்தோர் வாக்குகளை குறிவைத்து களம் இறங்கி இருக்கிறார். நயினார் நாகேந்திரன் வெளியூர் தொகுதியில் இருந்து களமிறங்குவதால் அது பாஜகவிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இதன் காரணமாகவே சாத்தூர் தொகுதியில் இருக்கிறது தொகுதி பங்கீட்டின்போது திருநெல்வேலியை கொடுக்காமல் சாத்தூர் தொகுதியை பாஜக தலைவர் நயினாருக்கு கொடுத்தது ஏன் என்ற கேள்விகள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Samayam Tamil