Dailyhunt
'பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் முன் ஜாமீனை ரத்துசெய்ய வேண்டும்'; பெண் நிர்வாகி நீதிமன்றத்தில் மனுதாக்கல்..!

'பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தவெக வேட்பாளர் முன் ஜாமீனை ரத்துசெய்ய வேண்டும்'; பெண் நிர்வாகி நீதிமன்றத்தில் மனுதாக்கல்..!

மிழக வெற்றிக் கழகத்தின் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளராக இருக்கும் பிரகாசம் என்கிற குட்டி சில மாதங்களுக்கு முன் திருவள்ளூரில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

அப்போது, அங்கிருந்த மகளிர் அணி நிர்வாகி ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதுகுறித்து தவெக தலைமைக்கு புகார் கொடுத்தபோது நடவடிக்கை எடுப்பதாக கூறியும், நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனையடுத்து, திருவள்ளூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் தனது கணவருடன் சென்று பாலியல் சீண்டல் அளித்த பிரகாசம் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெண் நிர்வாகி புகார் கொடுத்திருந்தார். குறித்த புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் நகர் போலீசார் பிரகாசம் மீது 06 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் பூந்தமல்லி தொகுதி தவெக வேட்பாளராக பிரகாசம் தாக்கல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் முன் ஜாமீன் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், பிரகாசத்துக்கு நிபந்தனைஉடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு இருந்தது.

ஆனால், தவெக வேட்பாளர் பிரகாசத்துக்கு வழங்கிய முன் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என புகார் அளித்த பெண் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அந்த மனுவில் வேட்பாளருக்கு எதிராக புகார் அளித்ததை தொடர்நது மிரட்டல் வருவதாகவும், தனது புகைப்படங்களுடன் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரப்பப்பட்டு வருவதாகவும், அதன் காரணமாக பள்ளியில் படிக்கும் தனது குழந்தைகள் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த ஜாமீனை ரத்து செய்யாக்கோரும் மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal