தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று மாநிலம் முழுவதும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.
அழகிரி மதுரையில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
மதுரை சத்திய சாய் நகரில் உள்ள வாக்குச்சாவடிக்குத் தனது குடும்பத்தினருடன் வந்த அவர், வரிசையில் நின்று ஜனநாயகக் கடமையாற்றினார்.
கடந்த சில ஆண்டுகளாகத் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தாலும், தேர்தல் நேரங்களில் மு.க. அழகிரியின் நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுவது வழக்கம். குறிப்பாக, அவரது தம்பி மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியில் இருக்கும் நிலையில், மதுரையில் அழகிரி வாக்களிப்பது முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
வாக்குச் செலுத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மக்கள் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்ற பொதுவான வேண்டுகோளை முன்வைத்தார்.
Seithi Punal
