தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக ஒழுங்குடனும் அமைதியுடனும் நிறைவு பெற்றது.
இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் அதிரடியான அரசியல் சூழலில் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றன. வழக்கமான நடைமுறையின்படி தபால் வாக்குகள் முதலில் ஆய்வு செய்யப்பட்டு, அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிந்த வாக்குகள் சுற்று முறையில் திறந்து கணக்கிடப்பட்டு வருகின்றன.

தற்போதைய முன்னிலை நிலவரங்களின் படி, தமிழக வெற்றிக் கழகம் 109 தொகுதிகளில் கணிசமான முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. அதைத் தொடர்ந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் 67 தொகுதிகளிலும், திராவிட முன்னேற்ற கழகம் 58 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து பரபரப்பை அதிகரித்தபடி நகர்கிறது.இந்நிலையில், மதுரை மேலூர் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட விஸ்வநாதன் 60,080 வாக்குகள் பெற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழகம் வேட்பாளர் மதுரை வீரன் 57,361 வாக்குகள் பெற்று 2,719 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.
மேலும், அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் போட்டியிட்ட பெரியபுள்ளான் (எ) செல்வம் 56,744 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோட்டை குமார் 9,570 வாக்குகள் பெற்று நான்காம் இடத்தில் திகழ்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Seithi Punal
