Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"சிறுவனுக்கு மது ஊற்றி பாலியல் கொடூரம்" - டிவி ரிமோட்டால் காவலரைத் தாக்கிவிட்டு தப்பிய சிறுவன் அசோக் நகர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

"சிறுவனுக்கு மது ஊற்றி பாலியல் கொடூரம்" - டிவி ரிமோட்டால் காவலரைத் தாக்கிவிட்டு தப்பிய சிறுவன் அசோக் நகர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்!

சென்னை கோடம்பாக்கத்தில் சிறுவன் ஒருவனுக்குக் கட்டாயப்படுத்தி மதுவை ஊற்றி, பாலியல் துன்புறுத்தல் செய்ததாக வடபழனி காவல் நிலைய காவலர் உட்பட மூவரைப் பிடித்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுவன் போலீசில் புகார்:

சென்னை கோடம்பாக்கம் பகுதியில் சிறுவன் ஒருவன், நபர் சிலரால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவத்தன்று அச்சிறுவனுக்குக் கட்டாயப்படுத்தி வாயில் மதுவை ஊற்றி, மூவர் கொண்ட கும்பல் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளது.

அப்போது, அங்கிருந்த தொலைக்காட்சிப் பெட்டியின் ரிமோட்டை (TV Remote) எடுத்த அச்சிறுவன், தன்னைத் துன்புறுத்தியவர்களில் ஒருவரான காவலரைத் தலையில் பலமாகத் தாக்கியுள்ளான். இதனால் அந்த கும்பல் நிலைகுலைந்த சமயம் பார்த்து, அங்கிருந்து அந்தச் சிறுவன் அதிர்ஷ்டவசமாகத் தப்பியோடினான்.

நடந்தே வந்து புகார் அளித்த சிறுவன்:

தாக்குதலில் இருந்து தப்பிய சிறுவன், கோடம்பாக்கத்தில் இருந்து அசோக் நகர் காவல் நிலையம் வரை பயத்துடன் நடந்தே வந்துள்ளான். அங்குப் பணியில் இருந்த போலீசாரிடம், தனக்கு நேர்ந்த கொடூரம் குறித்தும், தன்னைத் துன்புறுத்திய கும்பல் பற்றியும் அழுதுகொண்டே விரிவாகப் புகார் அளித்துள்ளான்.

சிறுவனின் புகாரைப் பெற்றுக்கொண்ட அசோக் நகர் போலீசார், உடனடியாக இந்த விவகாரம் குறித்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

காவலர் உட்பட மூவரிடம் தீவிர விசாரணை:

சிறுவன் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கிருந்த மூவரை அதிரடியாகப் பிடித்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.

காவலர் சிக்கினார்: போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிடிபட்டவர்களில் ஒருவர் வடபழனி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வரும் வேலப்பன் என்பது தெரியவந்தது. அவர்தான் சிறுவனால் டிவி ரிமோட்டால் தாக்கப்பட்டுப் காயமடைந்தவர் என்பதும் உறுதியானது.

அடுத்தகட்ட நடவடிக்கை: காவலர் வேலப்பன் மற்றும் அவருடன் இருந்த மற்ற இருவரையும் அசோக் நகர் போலீசார் ரகசிய இடத்தில் வைத்துத் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

காவல்துறையில் இருந்துகொண்டே சிறுவனுக்கு மது ஊற்றிப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற விவகாரத்தில், வடபழனி காவலர் சிக்கியிருப்பது சென்னை மாநகர காவல் துறையினரிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில், சம்பந்தப்பட்ட காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Seithi Punal
Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithipunal