Dailyhunt
ஆயுதப் போர் அல்ல.. இது ஆதிக்கப் போர்.. உலக நாடுகளுக்கு ஈரான் கொடுத்த 'சர்ப்ரைஸ்'.. அத்தியாவசிய கப்பல்களுக்கு மட்டும் 'விலக்கு.. உலக பொருளாதாரத்தில் திடீர் மாற்றம்..!!

ஆயுதப் போர் அல்ல.. இது ஆதிக்கப் போர்.. உலக நாடுகளுக்கு ஈரான் கொடுத்த 'சர்ப்ரைஸ்'.. அத்தியாவசிய கப்பல்களுக்கு மட்டும் 'விலக்கு.. உலக பொருளாதாரத்தில் திடீர் மாற்றம்..!!

த்திய கிழக்கில் போர் பதற்றம் நீடித்து வரும் சூழலில், உலகப் பொருளாதாரத்தின் உயிர்நாடியாகக் கருதப்படும் ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் சில கப்பல்கள் பயணிக்க ஈரான் நிபந்தனைகளுடன் அனுமதி அளித்துள்ளது.

குறிப்பாக, ஈரானியத் துறைமுகங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் மற்றும் இந்தியா, சீனா, ரஷ்யா போன்ற நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் இந்த விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தப் பாதையைப் பயன்படுத்த விரும்பும் கப்பல்கள் ஈரானிடம் முன் அனுமதி பெறுவதோடு, அந்த நாடு விதித்துள்ள கடுமையான விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடியாக, ஈரான் இந்த முக்கியக் கடல்வழிப் பாதையை மூடியது. இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 20 சதவீதம் பாதிக்கப்பட்டு, பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்தன.

தற்போது வழங்கப்பட்டுள்ள இந்தச் சிறிய தளர்வு ஓரளவிற்கு நிம்மதியைத் தந்தாலும், அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் இந்தப் பாதையை ஒரு நாட்டின் தனிப்பட்ட சொத்தாகக் கருத முடியாது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இது வெறும் ஆயுதப் போர் மட்டுமல்லாமல், எண்ணெய் மற்றும் உலகப் பொருளாதாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரு அதிகாரப் போராட்டமாகவும் மாறியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai