Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அடக்கடவுளே..! வெறும் 40 நிமிடம்தான்.. அதுக்குள்ள மொத்தமா எரிஞ்சு சாம்பலா போச்சு. கண்ணிமைக்கும் நொடியில் தீ விபத்தில் இரையான பெரிய கட்டிடம். அதிர்ச்சி காணொளி..!

அடக்கடவுளே..! வெறும் 40 நிமிடம்தான்.. அதுக்குள்ள மொத்தமா எரிஞ்சு சாம்பலா போச்சு. கண்ணிமைக்கும் நொடியில் தீ விபத்தில் இரையான பெரிய கட்டிடம். அதிர்ச்சி காணொளி..!

காராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள பண்ணை வீட்டில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நாக்பூரில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தை ஒட்டிய பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

பண்ணை வீட்டில் இருந்த கட்டடம் உள்ளிட்ட வளாகத்தின் பல்வேறு பகுதிகளில் வேகமாக தீ பரவியது. சிறிது நேரத்திலேயே கொழுந்துவிட்டு எரிந்த தீயால் அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. சுமார் 40 நிமிடங்களுக்குள் பண்ணை வீட்டின் பெரும்பகுதி தீயில் கருகி சேதமடைந்தது.

தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு கட்டுக்கடங்காமல் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். தீ வேகமாக பரவியதால் தீயணைப்பு வீரர்களுக்கு சவால் ஏற்பட்டது. தொடர்ந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் உயிரிழப்பு அல்லது யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல் இல்லை.

இந்த தீ விபத்தில் பண்ணை வீட்டில் இருந்த பொருள்கள் மற்றும் வளாகத்தின் பல பகுதிகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. குறிப்பாக தீ வேகமாக பரவியதால் அங்கு இருந்த பொருள்களை பாதுகாப்பாக வெளியே கொண்டு வருவதற்கு போதிய அவகாசம் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. தீயணைப்பு வீரர்கள் தீயை முழுமையாக அணைத்த பிறகு, சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் நடைபெற்றபோது பண்ணை வீட்டில் யாராவது இருந்தார்களா என்பது உள்ளிட்ட விவரங்களையும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சுமார் 40 நிமிடங்களில் ஒரு முழு வளாகமே தீயில் கருகிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தீ எவ்வாறு ஏற்பட்டது, தீ வேகமாக பரவுவதற்கு காரணம் என்ன என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏற்படாதது மட்டுமே ஆறுதல் அளிக்கும் விஷயமாக உள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai