Dailyhunt
AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மதம் குறித்த அவதூறு வீடியோ.. இளைஞர்களை வளைத்து பிடித்த போலீஸ். பரபரப்பு சம்பவம்.!!!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மதம் குறித்த அவதூறு வீடியோ.. இளைஞர்களை வளைத்து பிடித்த போலீஸ். பரபரப்பு சம்பவம்.!!!

த்தரப் பிரதேச மாநிலம் ஷாஜகான்பூர் மாவட்டத்தில் இந்து தெய்வங்கள் குறித்து அவதூறான வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்ட இரு இளைஞர்களை இந்து அமைப்பினர் பிடித்து மன்னிப்புக் கேட்கச் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிங்கோகி காவல் எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த சாஹில் மற்றும் அவரது நண்பர் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் உதவியுடன் சர்ச்சைக்குரிய வீடியோவை உருவாக்கிப் பதிவேற்றியுள்ளனர்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த இந்து அமைப்பினர் சௌதேரா கிராமத்திற்குச் சென்று அந்த இளைஞர்களைப் பிடித்தனர். பின்னர் அங்கிருந்த அனுமன் சிலையின் பாதங்களைத் தொட்டு மன்னிப்புக் கேட்கச் செய்ததுடன் காதைப் பிடித்து தோப்புக்கரணம் போடச் செய்தும் அவர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்த காவல்துறையினர் மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகச் சாஹில் என்பவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இருபத்தைந்து வயதான அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களைப் பறிமுதல் செய்துள்ள காவல்துறையினர் அவர் மீது ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இது போன்ற சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டுப் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். மேலும் மலிவான விளம்பரத்திற்காக மற்றவர்களின் மத நம்பிக்கைகளை இழிவுபடுத்த வேண்டாம் என்று இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai