சவூதி அரேபியாவில் உள்ள தூதரகத்தின் மீது ஈரான் நடத்திய எதிர்பாராத தாக்குதல் சர்வதேச அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
நள்ளிரவில் அனைவரும் உறங்கிக் கொண்டிருந்த வேளையில், மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் சவூதி தூதரகக் கட்டிடம் முற்றிலும் சேதமடைந்துள்ளதோடு, அப்பகுதியே போர்க்களம் போல காட்சியளிக்கிறது. ஈரானின் இந்த ஆக்ரோஷமான நடவடிக்கை, மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்கனவே நிலவி வரும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
இந்தத் தாக்குதல் அமெரிக்காவிற்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது. ஈரான் இவ்வளவு துணிச்சலாக இத்தகைய பெரிய அளவிலான தாக்குதலை நடத்தும் என்று அமெரிக்க உளவுத்துறையும் பாதுகாப்புப் படையினரும் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
மேலும் அமெரிக்காவின் கணக்கீடுகளைத் தகர்க்கும் வகையில் அமைந்துள்ள இந்தத் தாக்குதலால், அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. வளைகுடா பிராந்தியத்தில் அமைதியற்ற சூழல் நிலவுவதால், வல்லரசு நாடுகளின் அடுத்தகட்ட நகர்வுகள் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டு வருகின்றன.

