Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"அன்னைக்கு கேலி செஞ்சாங்க.. இன்னைக்கு மக்கள் பதில் சொல்லிட்டாங்க" ஆக்ஸிஸ் மை இந்தியா தலைவர் கொடுத்த 'நச்' பதிலடி..!!

"அன்னைக்கு கேலி செஞ்சாங்க.. இன்னைக்கு மக்கள் பதில் சொல்லிட்டாங்க" ஆக்ஸிஸ் மை இந்தியா தலைவர் கொடுத்த 'நச்' பதிலடி..!!

மிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், 'ஆக்ஸிஸ் மை இந்தியா' நிறுவனத்தின் தலைவர் பிரதீப் குப்தா அளித்துள்ள பேட்டி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று தனது நிறுவனம் கணித்தபோது, பல அரசியல் விமர்சகர்கள் தன்னைப் பார்த்து எள்ளி நகையாடியதாக அவர் வருத்தத்துடன் தெரிவித்தார். "விஜய்யின் வருகையை ஒரு பொருட்டாகவே மதிக்காமல் எங்களை கேலி செய்தார்கள், ஆனால் இன்று மக்கள் எங்கள் கணிப்புதான் சரி என்பதை நிரூபித்துவிட்டார்கள்" என்று அவர் நெஞ்சுயர்த்திப் பேசியுள்ளார்.

​தரவுகளை மட்டும் நம்பி களமிறங்கிய தங்களுக்கு, தமிழக மக்கள் ஒரு புதிய அரசியல் சக்தியை ஏற்றுக்கொண்டது முன்கூட்டியே தெரிந்ததாக அவர் குறிப்பிட்டார். "எங்களை பார்த்து சிரித்தவர்கள் இப்போது மவுனமாகிவிட்டனர்" என்று அவர் கூறியது, தவெக தொண்டர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசியலில் ஒரு மாற்றத்திற்கான விதையை ஆக்ஸிஸ் மை இந்தியா துல்லியமாக அடையாளம் கண்டுள்ளதை இந்தப் பேட்டி உறுதிப்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai