Dailyhunt
"அப்போவே சொன்னோம்.. ஆனா கேக்கல". விஜய் உடன் கை கோர்த்திருந்தால் சீன் வேற. கதறும் காங்கிரஸ் தொண்டர்கள்.. மேலிடம் எடுத்த "அந்த" ஒரு முடிவு..!!!

"அப்போவே சொன்னோம்.. ஆனா கேக்கல". விஜய் உடன் கை கோர்த்திருந்தால் சீன் வேற. கதறும் காங்கிரஸ் தொண்டர்கள்.. மேலிடம் எடுத்த "அந்த" ஒரு முடிவு..!!!

மிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் வருகை குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் வெளியிட்டுள்ள கருத்துக்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே தவெக தலைவர் விஜய்யுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் பலத்த விருப்பம் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறிப்பாக, ராகுல் காந்தியும் விஜய்யும் இணைந்து தேர்தல் களத்தில் பிரச்சாரம் மேற்கொண்டால், அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இந்த கூட்டணி அமைந்திருந்தால் சுமார் 190 இடங்கள் வரை எளிதாக வெற்றி பெற்றிருக்கலாம் என்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் நம்பியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், தற்போதைய அரசியல் சூழல் மற்றும் நீண்டகால உறவின் அடிப்படையில் காங்கிரஸ் மேலிடம் திமுகவுடனான கூட்டணியே தொடர வேண்டும் என்ற இறுதி முடிவை எடுத்ததாக கிரிஷ் ஜோடங்கர் விளக்கம் அளித்துள்ளார்.

இதனால் கட்சியின் அடிமட்டத் தொண்டர்கள் மற்றும் ஒரு தரப்பு நிர்வாகிகள் புதிய மாற்றத்தை விரும்பினாலும், அகில இந்திய காங்கிரஸ் தலைமை பழைய கூட்டணிக் கணக்குகளுக்கே முன்னுரிமை அளித்துள்ளது இதன் மூலம் தெளிவாகிறது. இந்தக் கருத்துக்கள் வரும் தேர்தல்களில் தமிழகத்தில் புதிய அரசியல் சமன்பாடுகள் உருவாக வாய்ப்புள்ளதா என்ற விவாதத்தை கிளப்பியுள்ளன.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai