Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"போலீசாரையே வெட்டிய துணிச்சல்" ரவுடியை சுட்டு பிடித்த காவல்துறை.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

"போலீசாரையே வெட்டிய துணிச்சல்" ரவுடியை சுட்டு பிடித்த காவல்துறை.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி..!!

நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் பைக்கில் வலம் வந்து பொதுமக்களைத் தொடர்ச்சியாக அரிவாளால் வெட்டி பயங்கரவாதத்தை ஏற்படுத்திய கும்பலைச் சேர்ந்த முக்கிய ரவுடி ஒருவனை போலீஸார் அதிரடியாகச் சுட்டுப் பிடித்துள்ளனர்.

நெல்லை அரசங்குளம் பகுதியில் மறைந்திருந்த நெட்டூரைச் சேர்ந்த பிரபல ரவுடி அய்யப்பன் என்பவனைப் பிடிக்க போலீஸார் முயன்றபோது, அவன் தப்பியோட முயன்று ஆயுதங்களால் போலீசாரைத் தாக்க முற்பட்டுள்ளான்.

அப்போது அய்யப்பனை மடக்கிப் பிடிக்கச் சென்ற தலைமை காவலர் முத்துக்குமாருக்குக் கையில் பயங்கரமாக அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் நிலைமை கையை மீறிச் சென்றதால், போலீஸார் தங்களின் தற்காப்புக்காக ரவுடி அய்யப்பனை நோக்கித் துப்பாக்கியால் அதிரடியாகச் சுட்டுப் பிடித்தனர். இந்த பயங்கரத் தாக்குதலில் காயமடைந்த தலைமை காவலர் முத்துக்குமார் மற்றும் காலில் குண்டு பாய்ந்த ரவுடி அய்யப்பன் ஆகிய இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி அய்யப்பன் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு கடுமையான வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. நெல்லை, தென்காசி மாவட்டங்களையே கடந்த சில நாட்களாக உலுக்கி வந்த இந்த தொடர் அரிவாள் வெட்டு சம்பவத்தில் இதுவரை 9 பேரை போலீஸார் கூண்டோடு கைது செய்துள்ளனர். மேலும், போலீஸாரை வெட்டிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை நள்ளிரவில் சுட்டுப் பிடித்த காவல்துறையின் இந்த அதிரடி ஆக்ஷன் சோஷியல் மீடியாவில் செம டாக்-ஆஃப்-தி-டவுனாக மாறியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai