அசாம் மாநிலத்தில் உள்ள 126 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் மொத்தம் 722 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் காலை முதலே பாஜக தொடர்ந்து முன்னிலை வகுத்து வந்தது.
இந்த நிலையில் முதலமைச்சர் ஹிமந்ந பிஸ்வா தலைமையிலான பாஜக அரசு மீண்டும் ஆட்சியை தக்க வைக்கிறது. அதாவது ஆட்சி அமைக்க மொத்தம் 64 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய நிலையில் தற்போது பாஜக 101 இடங்களில் வெற்றி வாகை சூட இருக்கிறது. காங்கிரஸ் கட்சி 23 இடத்திலும் பிற கட்சிகள் இரண்டு இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. மேலும் இதன் காரணமாக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சியை அசாமில் தக்க வைக்கிறது.

