Dailyhunt
Breaking: முதல்வர் ஸ்டாலினைப் போல நாங்கள் பொய் வாக்குறுதி தரமாட்டோம். தவெக தலைவர் விஜய் அதிரடி முழக்கம்.!!!

Breaking: முதல்வர் ஸ்டாலினைப் போல நாங்கள் பொய் வாக்குறுதி தரமாட்டோம். தவெக தலைவர் விஜய் அதிரடி முழக்கம்.!!!

திருச்சியில் மறைந்த முதலமைச்சர் எம்ஜிஆர் சிலைக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடையே பேசிய அவர் தமிழகத்தில் நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாகப் பல்வேறு தேநீர் கடைகள் மூடப்பட்டுள்ளதாகவும் இதனால் மக்கள் பெரும் நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும் வருத்தம் தெரிவித்தார்.

தனது குடும்பப் பிரச்சினைகளுக்காக மட்டும் டெல்லி செல்லும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மக்களின் அடிப்படைத் தேவையான எரிவாயு தட்டுப்பாடு குறித்துப் பேச ஏன் டெல்லி செல்லவில்லை என்று விஜய் கேள்வி எழுப்பினார். ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் மக்கள் நலனில் அக்கறையின்றி இருப்பதாக அவர் தனது உரையில் கடுமையாகச் சாடினார்.

தொடர்ந்து பேசிய விஜய் தவெக ஆட்சிக்கு வந்தால் ஸ்டாலினைப் போலப் பொய் வாக்குறுதிகளைத் தரமாட்டோம் என்று உறுதி அளித்தார். தமிழகப் பெண்களுக்கு ஆண்டுக்கு ஆறு எரிவாயு சிலிண்டர்கள் முற்றிலும் கட்டணமில்லாமல் வழங்கப்படும் என்றும் அவர் அதிரடி வாக்குறுதி அளித்தார். மேலும் ஏழைப் பெண்களுக்குத் திருமண உதவியாக ஒரு பவுன் தங்கம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.

விஜய்யின் இத்தகைய கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் மற்றும் ஆளுங்கட்சி மீதான நேரடித் தாக்குதல் திருச்சி அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் அவரது தொண்டர்களிடையே புதிய உற்சாகத்தை ஊட்டியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai