தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் பல தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை காலை 8:00 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஏப்ரல் 23ஆம்தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதேபோன்று அசாம், மேற்குவங்கம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று மொத்தமாக வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்த நிலையில் இன்று காலை முதல் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகம் பல தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது.
இந்த நிலையில் திமுகவுக்கு தொடர்ந்து பல இடங்களில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சொந்த தொகுதியான கொளத்தூரில் முதல்வர் ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் சேப்பாக்கத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பின்னடைவை சந்தித்துள்ளார். அதே நேரத்தில் திமுக கட்சியை சேர்ந்த 16 அமைச்சர்களுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதன்படி திருச்சி மேற்கில் கே என் நேரு, ராணிப்பேட்டையில் காந்தி, தூத்துக்குடியில் கீதாஜீவன், திருவெறும்பூரில் அன்பில் மகேஷ், திருச்சூழியில் தங்கம் தென்னரசு ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளனர். மேலும் தமிழக வெற்றி கழகம் தான் பல இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. அதன்படி இன்று காலை 9:40 நிலவரப்படி தமிழக வெற்றிக்கழகம் 89 தொகுதிகளிலும், அதிமுக 63 தொகுதிகளிலும் திமுக 52 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது

