தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தத்தைப் படைத்துள்ளார் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய்.
பெரம்பூர் தொகுதியில் போட்டியிட்ட அவர், பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். தனது வெற்றியைத் தொடர்ந்து, தேர்தல் நடத்தும் அலுவலரிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக வெற்றிச் சான்றிதழை விஜய் பெற்றுக்கொண்டார்.
வெற்றிச் சான்றிதழைப் பெற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜய், இந்த வெற்றியைத் தமிழக மக்களுக்குச் சமர்ப்பிப்பதாகத் தெரிவித்தார். அவரது வீட்டின் முன் குவிந்துள்ள பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் "தளபதி" மற்றும் "தமிழக முதல்வர்" என முழக்கமிட்டு வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.தவெகவின் இந்த எழுச்சி தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

