Dailyhunt
"எங்களை ஒரே இடத்துல அடக்கம் பண்ணுங்க". தற்கொலைக்கு முன் காதல் தம்பதி எழுதிய அந்த கடைசி கடிதம். கண்கலங்க வைக்கும் வரிகள்.!!!

"எங்களை ஒரே இடத்துல அடக்கம் பண்ணுங்க". தற்கொலைக்கு முன் காதல் தம்பதி எழுதிய அந்த கடைசி கடிதம். கண்கலங்க வைக்கும் வரிகள்.!!!

துரை ஊமச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த அருண் மற்றும் பிரியா என்ற காதல் தம்பதியினர், வாழ்வின் இன்னல்களால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆட்டோ ஓட்டுநரான அருண், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் சிக்கி கால் முறிவு ஏற்பட்டு வேலைக்குச் செல்ல முடியாமல் முடங்கியுள்ளார்.

இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் மருத்துவச் செலவுகள் அவர்களைக் கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியது. விரக்தியின் விளிம்பிற்குச் சென்ற அருண் தற்கொலை செய்ய முடிவெடுத்தபோது, "உங்களை விட்டுப் பிரிந்து என்னால் வாழ முடியாது" எனக் கூறி பிரியாவும் அவருடன் இணைந்து இந்த விபரீத முடிவை எடுத்துள்ளார்.

இந்த தம்பதியினர் உயிரிழப்பதற்கு முன்னதாக எழுதிய உருக்கமான கடிதத்தில், தங்களது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்றும், தங்கள் இருவரையும் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், "தங்கள் இறப்பைக் காரணம் காட்டி ஊர் கோயில் திருவிழாவை நிறுத்திவிட வேண்டாம்" என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது. போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், வறுமை மற்றும் உடல்நலக் குறைவால் இளம் தம்பதியினர் தங்களது வாழ்க்கையை முடித்துக் கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai