காலநிலை மாற்றத்தின் கோரத்தாண்டவம் குறித்து உலக சுகாதார அமைப்பு தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஊட்டச்சத்து குறைபாடு, மலேரியா மற்றும் அதீத வெப்ப அழுத்தம் காரணமாக வரும் 2030 முதல் 2050-ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு சராசரியாக 2.5 லட்சம் கூடுதல் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
நிலைமை இப்படியே நீடித்தால், இயற்கை பேரிடர்கள் மற்றும் கடுமையான வெப்ப உயர்வால் 2050-க்குள் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை ஆண்டுக்கு 7 லட்சமாக உயரக்கூடும் என அந்தத் தகவல் தெரிவிக்கிறது.
ஒட்டுமொத்த உலகையும் அச்சுறுத்தி வரும் இந்த வெப்ப உயர்வு, எதிர்காலத்தில் மனித இனத்திற்கு மிகப்பெரிய சவாலாக மாறப்போகிறது என்பதையே இந்த புள்ளிவிவரங்கள் உணர்த்துகின்றன.

