Dailyhunt
"இனி வேலைக்கு ஆகாது!".. 37 வருட அரசியல் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்கை வி. நாராயணன்.. பரபரக்கும் அரசியல்..!!

"இனி வேலைக்கு ஆகாது!".. 37 வருட அரசியல் பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்த அமெரிக்கை வி. நாராயணன்.. பரபரக்கும் அரசியல்..!!

காங்கிரஸ் கட்சியில் 37 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த மூத்த தலைவர் அமெரிக்கை வி. நாராயணன், அக்கட்சியிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

கடந்த 1988-ம் ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று ஜி.கே. மூப்பனார் முன்னிலையில் கட்சியில் இணைந்த இவர், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு பொதுவாழ்விற்கு வந்தவர்.

வேளச்சேரி நலச்சங்கங்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சங்கங்களுடன் இணைந்து அடிமட்ட மக்களுக்காகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அவர், தற்போது கட்சியின் செயல்முறைகள் தனது சேவை மனப்பான்மைக்கு ஒத்துப்போகவில்லை என்ற காரணத்தால் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தனது விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், அரசியல் கட்சி என்பது மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு கருவி மட்டுமே என்றும், அது காலத்திற்கு ஏற்ப மாறவில்லை என்றால் அதில் நீடிப்பதில் அர்த்தமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

"ஏவுகணை காலத்தில் கையில் கத்தியுடன் களத்தில் நிற்பது முட்டாள்தனம்" என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், அரசியல் தொண்டர்கள் அனைவரும் தாங்கள் சார்ந்திருக்கும் கட்சி நாட்டிற்கு உண்மையாக உழைக்கிறதா என்பதைச் சிந்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். கட்சியிலிருந்து விலகினாலும், சுயேச்சையாகத் தனது பொதுச்சேவையைத் தொடர்ந்து முன்னெடுப்பேன் என்றும் அவர் உறுதிபடக் கூறியுள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai