ஒடிசா மாநிலம் தேன்கனல் மாவட்டத்தில், தனது மாற்றுத்திறனாளி மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
59 வயதான ரஹாஸ் சேத்தி என்பவர், தனது 21 வயது மகளின் உடல்நிலையைப் பயன்படுத்தி நீண்ட நாட்களாக இந்த கொடூர செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.
அந்தப் பெண் சமீபத்தில் தேன்கனல் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்த பிறகுதான் இந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர், குற்றம் சாட்டப்பட்ட தந்தையை உடனடியாகக் கைது செய்துள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபினவ் சோங்கர் கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
பெற்ற மகளுக்கே தந்தை இழைத்த இந்த அநீதி அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

