தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026 முடிவுகளின் எதிரொலியாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதலமைச்சர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, சென்னை கோட்டை புனித ஜார்ஜ் வளாகத்தில் உள்ள தமிழகத் தலைமைச் செயலகத்தில் ஒரு சகாப்தம் நிறைவுக்கு வரும் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.
மேலும் புதிய அரசு பொறுப்பேற்கவுள்ள நிலையில், தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களின் அறைகளில் மாட்டி வைக்கப்பட்டிருந்த மு.க.ஸ்டாலினின் புகைப்படங்கள், பெயர் பலகைகள் மற்றும் முந்தைய அமைச்சரவை சார்ந்த அரசுப் பொருட்களைப் பணியாளர்கள் அவசர அவசரமாக அகற்றி வருகின்றனர்.
">
இதனால் தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து கோட்டையில் அதிகாரம் கைமாறும் இந்த எதார்த்தமான காட்சிகள், தி.மு.க. தொண்டர்கள் மற்றும் அமைச்சர்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், விரைவில் அமையவிருக்கும் புதிய ஆட்சியாளர்களின் வருகைக்காகத் தலைமைச் செயலக அறைகளைத் தயார் செய்யும் பணிகள் விறுவிறுப்பாக முடுக்கிவிடப்பட்டுள்ளன.

