Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
சிறை வாசலிலே தூக்கிய போலீஸ்.. ஜாமினில் வந்த ரவுடிக்கு காத்திருந்த செம ஷாக்.. பாளையங்கோட்டையில் பரபரப்பு..!!

சிறை வாசலிலே தூக்கிய போலீஸ்.. ஜாமினில் வந்த ரவுடிக்கு காத்திருந்த செம ஷாக்.. பாளையங்கோட்டையில் பரபரப்பு..!!

பாளையங்கோட்டை மத்திய சிறை வாசலில் ஜாமினில் வெளியே வந்த சரித்திர பதிவேடு (History Sheeter) குற்றவாளி ஒருவரை, சிறப்பு பிரிவு போலீசார் சினிமா பாணியில் காத்திருந்து அதிரடியாகக் கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீதிமன்ற உத்தரவின்படி ஜாமின் பெற்று சிறையிலிருந்து அவர் வெளியில் வந்த சில நிமிடங்களிலேயே, நிலுவையில் இருந்த மற்றொரு குற்ற வழக்கிற்காகச் சிறை வாசலிலேயே மறைந்திருந்த போலீசார் அவரை சுற்றி வளைத்தனர். இந்தத் திடீர் கைது நடவடிக்கை சிறை வளாகத்தில் இருந்தவர்களையெல்லாம் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

​போலீசார் அந்தப் பிரபல குற்றவாளியை அங்கிருந்து பைக்கில் அழைத்துச் செல்ல முயன்றபோது, அங்கிருந்த வழக்கறிஞர்கள் போலீசாரின் இந்தத் திடீர் கைது நடவடிக்கைக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசாரை தடுத்து நிறுத்த முயன்றனர். இதனால் இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றி, பயங்கர தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த மோதலில் எதிர்பாராதவிதமாகக் காயமடைந்த வழக்கறிஞர் ஒருவர் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவத்தால் பாளையங்கோட்டை சிறை வளாகத்தில் பெரும் பதற்றமும், கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai