Dailyhunt
"தம்பி விஜய் இதை உணரணும்!".. விசில் சத்தம் வேற.. குண்டு சத்தம் வேற.. போட்டு தாக்கிய தமிழிசை.. பரபரக்கும் அரசியல் களம்..!!

"தம்பி விஜய் இதை உணரணும்!".. விசில் சத்தம் வேற.. குண்டு சத்தம் வேற.. போட்டு தாக்கிய தமிழிசை.. பரபரக்கும் அரசியல் களம்..!!

ழனியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், வரும் சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள 'விசில் புரட்சி', பசுமைப் புரட்சி மற்றும் வெண்மைப் புரட்சி போன்று மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும், த.வெ.க-வின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் உறுதியாகக் கூறினார்.

செங்கோட்டையனின் இந்த கருத்துக்குப் பதிலடி கொடுத்துள்ள தமிழிசை சவுந்தரராஜன், விசில் சத்தத்திற்கும் குண்டு சத்தத்திற்கும் வித்தியாசம் இருப்பதை தம்பி விஜய் உணர வேண்டும் என்று விமர்சித்துள்ளார். மே 4-ஆம் தேதி வரை த.வெ.க-வினர் கனவு காணட்டும் என்று கூறிய அவர், தற்போது ஆன்மீகப் பயணம் மேற்கொண்டுள்ள விஜய், விரைவில் அரசியலை விட்டுவிட்டு மீண்டும் சினிமா படப்பிடிப்பிற்கு இடம் தேடிச் சென்றுவிடுவாரோ என்ற சந்தேகம் தமக்கு இருப்பதாகக் கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai