Dailyhunt
"தமிழகத்தின் தலையில் 5 லட்சம் கோடி கடன்!".. திமுக அரசை புள்ளிவிவரங்களுடன் வறுத்தெடுத்த இபிஎஸ்.. சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் எடப்பாடியின் சரமாரி கேள்வி..!!

"தமிழகத்தின் தலையில் 5 லட்சம் கோடி கடன்!".. திமுக அரசை புள்ளிவிவரங்களுடன் வறுத்தெடுத்த இபிஎஸ்.. சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் எடப்பாடியின் சரமாரி கேள்வி..!!

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாகச் சாடினார்.

பட்டாசுத் தொழிலைப் பாதுகாக்க அதிமுக எப்போதும் முன்னின்று போராடியதாகவும், தற்போதைய திமுக ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

குறிப்பாக, தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த அடுத்த 3 மாதங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று அதிரடி வாக்குறுதி அளித்தார். மேலும், திமுக அரசு கடந்த சில ஆண்டுகளில் மட்டும் சுமார் 5 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளதாகவும், இதனால் மக்களின் தலையில் பெரும் கடன் சுமை ஏறியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

டாஸ்மாக் மற்றும் பல்வேறு துறைகளில் ஊழல் மலிந்துவிட்டதாகக் குறிப்பிட்ட எடப்பாடி பழனிசாமி, காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தை திமுக முடக்கியுள்ளதாகக் கூறினார். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் முடக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும், தவறு செய்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தனது உரையில் எச்சரித்தார்.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai