Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
"வேலைக்கு போன்னு சொன்னது தப்பா..?" - சில நாட்களாகவே வீட்டிற்குள் நடந்த போராட்டம்.. தூக்கில் பிணமாகத் தொங்கிய மகனைப் பார்த்து உறைந்த பெற்றோர்..!!"

"வேலைக்கு போன்னு சொன்னது தப்பா..?" - சில நாட்களாகவே வீட்டிற்குள் நடந்த போராட்டம்.. தூக்கில் பிணமாகத் தொங்கிய மகனைப் பார்த்து உறைந்த பெற்றோர்..!!"

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவரின் மகன் மனோ (21 வயது). பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவர், கடந்த சில நாட்களாகச் சரிவர வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார்.

இதனால் அவரது பெற்றோர் வேலைக்குச் செல்லுமாறு அவரைக் கண்டித்துள்ளனர்.

பெற்றோரின் கண்டிப்பால் கடந்த சில நாட்களாகவே மனமுடைந்து காணப்பட்ட வாலிபர் மனோ, நேற்று முன்தினம் அதிகாலையில் தனது வீட்டில் திடீரெனத் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காலையில் எழுந்து பார்த்த குடும்பத்தினர், மனோ தூக்கில் பிணமாகத் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

இந்தச் சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், மனோவின் உடலைக் கைப்பற்றிப் பிரேத பரிசோதனைக்காகக் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். வாலிபரின் இந்தத் திடீர் முடிவு அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Seithisolai