Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
# சற்று முன் அவசர ஆலோசனை.... அரசியலில் இருந்து விலகும் சி. விஜயபாஸ்கர்..? அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு...!!!

# சற்று முன் அவசர ஆலோசனை.... அரசியலில் இருந்து விலகும் சி. விஜயபாஸ்கர்..? அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு...!!!

Tamil Spark 2 weeks ago

திமுகவில் தொடர்வதா அல்லது அரசியலிலிருந்து முற்றிலும் விலகவதா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் சி.

விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தியுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டம், அதிமுக வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

கட்சியின் தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் எதிர்கால நகர்வுகள் குறித்து ஆதரவாளர்களுடன் நீண்ட நேரம் விவாதித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தின் போது தனது அரசியல் எதிர்காலம் தொடர்பாக ஆதரவாளர்கள் எடுக்கும் எந்த முடிவுக்கும் தாம் கட்டுப்படுவதாக சி. விஜயபாஸ்கர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதிமுக விற்கு இந்த நிலைமையா? எடப்பாடியை தலைமை பொறுப்பிலிருந்து மாற்றம்.... ஷாக் தகவல்!!!

இலுப்பூரில் நடந்த முக்கிய ஆலோசனை

தகவலின்படி, இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட மற்றும் ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர். அதிமுகவில் நிலவி வரும் உள்கட்சி சூழ்நிலை, எதிர்கால கூட்டணி அரசியல் மற்றும் தலைமை தொடர்பான விவாதங்களும் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

குறிப்பாக, கட்சியில் தொடர்ந்து செயல்பட வேண்டுமா அல்லது அரசியல் வாழ்க்கையில் இருந்து ஓய்வு பெற வேண்டுமா என்ற கேள்வி குறித்தே அதிகமாக ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஸ்.பி. வேலுமணி முடிவுக்கு பிறகு புதிய விவாதம்

நேற்று வரை தனித்த அரசியல் நிலைப்பாட்டில் இருந்ததாகக் கூறப்பட்ட எஸ்.பி. வேலுமணி, தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்படத் தொடங்கியுள்ளார். இந்த மாற்றம் அதிமுகவின் உள்கட்சி சமன்பாடுகளில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

இதையடுத்து, சி. விஜயபாஸ்கர் மற்றும் சி.வி. சண்முகம் ஆகியோர் மட்டும் இன்னும் தனித்த அரசியல் பாதையில் இருப்பது குறித்து கட்சித் தொண்டர்கள் மத்தியில் விவாதம் அதிகரித்துள்ளது.

அதிமுக வட்டாரங்களில் பரபரப்பு

தற்போதைய சூழலில், அதிமுக தலைமையுடன் இணைந்து செயல்படுவாரா அல்லது புதிய அரசியல் முடிவை எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் புதுக்கோட்டை மட்டுமல்லாமல் மாநில அரசியல் வட்டாரங்களிலும் இந்த விவகாரம் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.

சி. விஜயபாஸ்கரின் அடுத்த கட்ட அரசியல் முடிவு குறித்து அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

திடீர் திருப்பம்.... இனி தவெக கட்சிக்கு ஆதரவு இல்லை! அதிருப்தியால் மீண்டும் திரும்ப அலோசனை...!!!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark