Dailyhunt Logo
  • Light mode
    Follow system
    Dark mode
    • Play Story
    • App Story
அரசியலில் அடுத்த குண்டு.... செல்வப்பெருந்தகை பதவி ராஜினாமா? பாய்ந்து வந்த மாணிக்கம் தாகூர்.. வெடித்த பூகம்பத்தால் பரபரக்கும் தமிழக அரசியல்.!!!

அரசியலில் அடுத்த குண்டு.... செல்வப்பெருந்தகை பதவி ராஜினாமா? பாய்ந்து வந்த மாணிக்கம் தாகூர்.. வெடித்த பூகம்பத்தால் பரபரக்கும் தமிழக அரசியல்.!!!

Tamil Spark 1 month ago

மிழக காங்கிரஸ் அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான கடிதம் டெல்லி காங்கிரஸ் மேலிடத்திடம் சமர்ப்பிக்கப்பட்டதாக கூறப்படுவதால், அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவுகிறது.

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தலைவர் பதவியில் தொடர விருப்பமில்லை என்று ஏற்கனவே செல்வப்பெருந்தகை தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவரது விலகல் முடிவு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.

ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கும் சி.விஜயபாஸ்கர்! அப்போ தவெக இல்லையா... இப்போ திமுகவா! அரசியலில் வெடிக்கப்போகும் பெரிய பூகம்பம்...!!!

டெல்லி மேலிடத்தின் புறக்கணிப்பா?

கட்சி வட்டாரங்களில் வெளியாகும் தகவலின்படி, டெல்லி காங்கிரஸ் தலைமை தொடர்ந்து தன்னை புறக்கணித்து வருவதாக செல்வப்பெருந்தகை கருதியதாக கூறப்படுகிறது. இதுவே அவரது ராஜினாமா முடிவுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற அவரது மகள் திருமண விழாவிற்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் மற்றும் மேலிடப் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் அவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மட்டும் கலந்து கொண்ட நிலையில், திமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் விழாவில் பங்கேற்று வாழ்த்து தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய தலைவராக மாணிக்கம் தாகூர்?

செல்வப்பெருந்தகையின் விலகல் முடிவைத் தொடர்ந்து, தமிழக காங்கிரஸ் தலைமைக்கு புதிய முகம் தேர்வு செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அந்த வகையில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பெயர் முன்னணியில் இருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

அவரது நியமனம் தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத போதிலும், கட்சியின் எதிர்கால அரசியல் நகர்வுகளில் அவர் முக்கிய பங்காற்றக்கூடும் என்ற கருத்து நிலவுகிறது.

தமிழக அரசியலில் புதிய சமன்பாடுகள்?

சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழக காங்கிரஸில் உள்கட்சி கருத்து வேறுபாடுகள் அதிகரித்துள்ளதாக கூறப்படும் சூழலில், தலைமை மாற்றம் குறித்த பேச்சுகள் மேலும் வேகம் பெற்றுள்ளன. இதனுடன் பல்வேறு கூட்டணி அரசியல் கணக்கீடுகளும் இணைந்து பேசப்பட்டு வருகின்றன.

செல்வப்பெருந்தகையின் ராஜினாமா தொடர்பான தகவல் மற்றும் அடுத்த தலைவர் குறித்த ஊகங்கள், தமிழக அரசியலில் அடுத்தகட்ட மாற்றங்கள் குறித்து புதிய விவாதங்களை உருவாக்கியுள்ளன. இருப்பினும், இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் மேலிடத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பே இறுதி நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

அடிமேல் அடிவாங்கும் அதிமுக! தவெகவில் ஜெயகுமாரா? கசிந்த தகவலால் செம ஷாக்கில் எடப்பாடி..!!!

Dailyhunt
Disclaimer: This content has not been generated, created or edited by Dailyhunt. Publisher: Tamil Spark