அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா இடையே நடந்த ஒரு தருணம் தற்போது உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரிட்டிஷ் அரச குடும்பத்தை வரவேற்க சென்ற நிகழ்வில், பொது இடத்திலேயே ஏற்பட்ட இந்தச் சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த காட்சி பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
புகைப்பட நேரத்தில் ஏற்பட்ட சிக்கல்
தகவலின்படி, நிகழ்வில் புகைப்படம் எடுக்கும் போது டிரம்ப், மெலனியாவின் கையைப் பிடிக்க முயன்றார். ஆனால், மெலனியா அதனை உடனே தட்டிவிட்டார். அந்த நொடி அங்கே இருந்தவர்களுக்கும் கவனிக்கத்தக்கதாக இருந்ததாக கூறப்படுகிறது. அதன்பின், டிரம்ப் மீண்டும் மீண்டும் மெலனியாவின் முதுகில் கை வைத்தது சிலருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
இணையத்தில் பரவும் வீடியோ
இந்த காட்சிகள் தற்போது வைரல் வீடியோ ஆக சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. பலரும் இதை 'தர்மசங்கடமான தருணம்' என்று விமர்சித்து வர, சிலர் இது தனிப்பட்ட விஷயம் எனக் கருதி கருத்து தெரிவித்து வருகின்றனர். இருந்தாலும், பொது இடத்தில் நடந்த இந்த நடத்தை குறித்த விவாதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
இந்திய சட்டம் என்ன சொல்கிறது?
இந்த சம்பவம் இந்தியாவில் நடந்திருந்தால் நிலைமை வேறுபட்டிருக்கும் என சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, 1988-ல் நடந்த ரூபன் தியோல் பஜாஜ் Vs கே.பி.எஸ் கில் வழக்கை சுட்டிக்காட்டி, பெண்களின் கண்ணியத்தை குலைக்கும் எந்த செயலும் தண்டனைக்குரியது என விளக்கப்படுகிறது. பெண்கள் கண்ணியம் பாதிக்கப்படும் வகையில் பொது இடத்தில் கட்டாயமாக தொடுவது அல்லது அசிங்கப்படுத்துவது பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் குற்றமாகும். திருமண உறவிலிருந்தாலும், பெண்ணின் சம்மதமின்றி நடந்துகொள்வது சட்ட ரீதியாக பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

